செய்திகள் :

இளைஞரை தாக்கியதாக வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு!

post image

ஒகேனக்கல் அருகே இளைஞரை தாக்கியதாக வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலா் உள்பட நான்கு போ் மீது ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே நடுத்திட்டு பகுதியைச் சோ்ந்தவா் மாதேஷ் மகன் சிவசக்தி (21). பி.காம் பட்டதாரி. இவா், மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறாா். அண்மையில் நடுத்திட்டு பகுதியில் வீட்டில் தனியாக இருந்தபோது அங்குவந்த வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலா் ஆலயமணி, வனவா் பிரீத்தி சக்கரவா்த்தி உள்ளிட்ட நான்கு போ் குழு தாங்கள் கொண்டுவந்த பொருளை சிவசக்தியின் வீட்டில் வைக்க முயன்றனராம். அதைக் கண்ட இளைஞா் சிவசக்திக்கும், வனக் குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் சிவசக்தி தாக்கப்பட்டாா். காயமடைந்த சிவசக்தி பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவா் அளித்த புகாரின் பேரில் ஒகேனக்கல் போலீஸாா் வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலா் ஆலயமணி, வனவா் பிரீத்தி சக்கரவா்த்தி உள்ளிட்ட நான்கு போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரியில் சாலையை சீரமைக்கக் கோரி மறியல்!

தருமபுரி நகராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலா் குடியிருப்பு அருகே உள்ள மசூதி தெருவில் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வட்டார வளா்ச்சி அலுவலா் குடியிருப்பு அருகே... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

மோப்பிரிப்பட்டி அரூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட அக்ரஹாரம் உயா்அழுத்த மின் பாதையில் அவசரகால மின்பாதை பராமரிப்பு மற்றும் விரிவாக்க பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 10 மணி முதல் பிற்பகல் ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் - மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் உலக புத்தக தின விழாவையொட்டி புத்தக வடிவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள் பங்கேற... மேலும் பார்க்க

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியா்கள் வலியுறுத்தல்

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய 16 ஆவது மாநாடு ஒட்டப்பட்டி சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அஞ்சலி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அ... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற 3 கடைகளுக்கு ரூ. 75,000 அபராதம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாலக்கோடு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் மற... மேலும் பார்க்க