செய்திகள் :

கோத்தகிரி: குறைமாத குட்டி ஈன்று இறந்து கிடந்த தாய் யானை.. என்ன காரணம்? - குழப்பத்தில் வனத்துறை

post image

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகில் உள்ள நட்டக்கல் பகுதியயைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சிலர் வழக்கமாக தேயிலை பறிக்கும் பணிக்கு நேற்று காலை சென்றிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் யானை ஒன்று வழக்கத்திற்கு மாறாக படுத்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

உயிரிழந்த தாய் யானை

அருகில் சென்று பார்த்தபோது யானை இறந்து கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டுள்ளனர். மேலும் இறந்து கிடந்த யானையின் அருகில் குறைமாத யானை குட்டி ஒன்றும் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.

உடனடியாக எஸ்டேட் மேனேஜரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர். எஸ்டேட் நிர்வாகம் மூலம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் களத்திற்கு சென்று யானையின் இறப்பை உறுதி செய்துள்ளனர்.

முதுமலையில் இருந்து கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொண்டுள்ளனர். இறந்த தாய் யானை மற்றும் குறைமாத குட்டியின் உடல் பாகங்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறைமாத யானை குட்டி

இந்த சோகம் குறித்து தெரிவித்த வனத்துறையினர், "உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 15 முதல் 20 வயது இருக்கலாம். சுமார் 16 வாரம் கர்ப்பமாக இருந்த இந்த பெண் யானை திடீரென குறை மாதத்தில் குட்டியை ஈன்றிருக்கிறது. அந்த இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்திருக்கிறது. இறப்புக்கான காரணம் குறித்து எதுவும் புலப்படவில்லை குழப்பமாக இருக்கிறது. வழக்கத்திற்கு மாறான இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகளை வைத்தே உண்மை நிலவரத்தை கண்டறிய முடியும்" என்றனர் .

மும்பை: அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் திடீர் தீவிபத்து; முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்..!

மும்பை தென்பகுதியில் இருக்கும் பெல்லார்ட் எஸ்டேட்டில் அமலாக்கப்பிரிவின் அலுவலகம் இருக்கிறது. இந்த அலுலகத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. அமலாக்கப் பிரிவு அலுவலக கட்டிடத்தின... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண் தொழிலாளர்கள் பலி; 7 பேர் காயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர். சிவகாசி சிறுகுளம் காலணியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 57) மற்றும் பூத்தாயம்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் தீ விபத்து; கர்ப்பிணிகள் மீட்பு; கொதிக்கும் மக்கள்

தஞ்சாவூரின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை.பழமையான இந்த மருத்துவமனையில் மகப்பேறு, அவசரக் கால அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், கண் சிகிச்சை, ச... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் அமர்ந்த தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகள்; பெரியப்பாவுடன் ரயில் மோதி இறந்த பரிதாபம்!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகில் உள்ள ஜெகத்புரா பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் சுமித், குடும்ப பிரச்னையில் தனது மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு தற்கொலை செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார். அவர்... மேலும் பார்க்க

கரூரில் தொடர்ந்து சதமடித்த வெயில்... வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?

கரூரிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் மிகவும் பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில... மேலும் பார்க்க

கடலூர், கள்ளக்குறிச்சி: ஏரி, ஓடையில் குளிக்கச் சென்ற 5 சிறுவர், சிறுமியர் நீரில் மூழ்கி பலியான சோகம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகில் இருக்கிறது வடக்கு கொளக்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த உபையதுல்லா (9), முகமது ஹபில் (10), ஷேக் அப்துல் ரகுமான் (13) போன்றவர்கள் நண்பர்கள். இவர்கள் ம... மேலும் பார்க்க