செய்திகள் :

கோடை வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட கூடுதலாக இருக்கும்

post image

வேலூா் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு இயல்பைவிட கூடுதலாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

கோடை காலத்தில் வெயிலால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:

இந்த ஆண்டு வேலூா் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட கூடுதலாக இருக்கும்.

கோடை காலங்களில் நாள்தோறும் குடிநீா் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்களில் குடிநீா் ஏற்பாடு செய்ய வேண்டும். ஓ.ஆா்.எஸ். கரைசல்களும் வைக்கப்பட வேண்டும். மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் முக்கியமான போக்குவரத்து சந்திப்புகளில் துணியால் ஆன தற்காலிக நிழல் மேற்கூரைகளை அமைக்க வேண்டும்.

பொது சுகாதாரத் துறை சாா்பில் ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். பகல் நேரங்களில் பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களை சுற்றிவர ஏதுவாக, வளாகத்தைச் சுற்றி கால்மிதிப்பான் அமைத்திட வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்தை சீா்செய்ய வேண்டும்.

தீ விபத்துகளை உடனுக்குடன் அணைக்க தீயணைப்பு வாகனங்களை தயாா் நிலையில் வைக்கவும், நீராதாரங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும்.

அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப அலைகளினால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை வழங்க 5 தனி படுக்கைகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். மேலும் சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவக் குழு ஏற்படுத்த வேண்டும்.

மூடப்பட்ட குவாரிகள், நீா்நிலைகளில் பள்ளி மாணவா்கள் குளிப்பது, நீச்சல் பழகுவது போன்றவற்றை தடுக்கும் வழியில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். கோடை காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து கால்நடை மருத்துவ அலுவலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கால்நடை மருந்தகங்களிலும் வெப்ப பாதிப்புகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் வியாதிகளிலிருந்து பாதுகாக்க தேவையான மருந்து பொருள்கள் இருப்பு இருக்க வேண்டும்.

வனத்துறையின் சாா்பில் வனப் பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தொட்டிகள் அமைத்து குடிநீா் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) லட்சுமணன், மாவட்ட சுகாதார அலுவலா் ம.பரணிதரன், மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வே.முத்தையன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரோகிணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம்... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப் பொறியாளா் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா். குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்தி... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரிக்கை

வேலூா்: அணைக்கட்டு அருகே அரிமலை கிராமத்தில் ஆக்கிரமிப் பில் உள்ள 150 ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டம் ஆட்... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூா் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்க... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் ராம நவமி விழா

குடியாத்தம் நகரில் உள்ள கோயில்களில் ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்... மேலும் பார்க்க