செய்திகள் :

கோட்டாவில் மற்றுமொரு நீட் மாணவி தற்கொலை! ஒரே ஆண்டில் 15-ஆவது மரணம்

post image

கோட்டாவில் மற்றுமொரு நீட் மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவி ஜீஷான்(18). இவர் கோட்டாவில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக திங்கள்கிழமை போலீஸார் தெரிவித்தனர். இந்த ஆண்டில் கோட்டாவில் நடக்கும் 15வது சம்பவம் இதுவாகும்.

அதேசமயம் இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது சம்பவமாகும். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, ஜீஷான் தனது உறவினரிடம் அதுகுறித்து தெரிவித்திருக்கிறார். உடனே அவர் அதே மாடியில் வசித்து வந்த மற்றொரு மாணவி மம்தாவை அழைத்து, ஜீஷானை பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது!

அவர் சென்று பார்த்தபோது ஜீஷானின் அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். கதவை உடைத்து திறந்தபோது ஜீஷான் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஜீஷான் ஒரு மாதத்திற்கு முன்பு கோட்டாவுக்கு வந்தார். ஆரம்பத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்காக பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்தார். பிறகு அவர் தனியாகவே நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இவ்வாறு தெரிவித்தனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]. 

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய... மேலும் பார்க்க

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க