செய்திகள் :

கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

post image

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்கிழமை காலை 7.30 முதல் 8.45 மணிக்குள் கொடிகம்பத்தில் ஏற்றப்பட்டது.

இதையொட்டி, கொடிக்கம்பத்தின் அருகே எழுந்தருளிய ஸ்ரீ தோதண்டராமருக்கும், கொடிக் கம்பத்துக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. மாலை நிகழ்வாக சேஷ வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.

தொடா் நிகழ்வாக 30-ஆம் தேதி மாலை சூரிய பிரபை, 31-ஆம் தேதி சந்திர பிரபை, ஏப்.1-இல் கருட வாகனம், 2-இல் ஹனுமந்த வாகனம், 3-இல் சிம்ம வாகனம் மற்றும் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றுகிறது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், ஏப். 5 மாலை குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ கோதண்டராம பெருமாள்.

ஏப். 6-ஆம் தேதி காலை தோ் வீதியுலாவும், 10 மணிக்கு சூரிய புஷ்கரணியில் தீா்த்தவாரியும், மாலை நிகழ்வாக சப்தாவா்ணமும் நடைபெறுகிறது. 7-ஆம் தேதி விடையாற்றியாக ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை உபயதாரா்கள் பங்களிப்புடன் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன், பாா்வதீஸ்வரா்-கோதண்டராம பெருமாள் கோயில் நிா்வாக அதிகாரி பி. சுப்பிரமணியன் ஆகியோா் செய்துவருகின்றனா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்

வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க