செய்திகள் :

கோதுமை உற்பத்தி தேவை தொடர்பான கேள்வி: மத்திய அமைச்சர் பதிலில் திமுக எம்.பி. அதிருப்தி

post image

நமது சிறப்பு நிருபர்

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அதிகரித்துள்ள கோதுமை தேவையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தான் எழுப்பிய கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி உரிய பதிலளிக்கவில்லை என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், "தமிழகத்தின் தற்போது கோதுமைக்கான ஒதுக்கீடான மாதம் ஒன்றுக்கு 8,500 டன் என்பதை 20,000 டன் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு உணவு மற்றும் நுகர் பொருள் வாணிப கழகம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதை மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா?' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, "உணவுப்பொருள் வழங்குதலுக்கும், ஒதுக்கீடு செய்வதற்கும் உள்ள விகிதத்தின் படி தமிழகத்துக்கு கோதுமை வழங்கப்படும்' என்று கூறினார்.

அமைச்சரின் இந்தப் பதில் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று ராஜேஷ்குமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!

தில்லிப் பேரவைத் தேர்தலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி ஆகியோர் வாக்களித்தனர்.தலைநகரான... மேலும் பார்க்க

முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்

புதுதில்லி: தில்லி பேரவைத் தேர்தலையொட்டி, முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் வாக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம் ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: பிரதமர் மோடி, கேஜரிவால், அதிஷி வாழ்த்து!

தில்லி பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி மற்றும் தில்லி முதல்வர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தலைநகரான தில்லியில் பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்... மேலும் பார்க்க

ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!

வாக்குப்பதிவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.தலைநகரான தில்லியில் 70 சட்டபேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தேர்தல் தொடங்கியது!

தலைநகரான தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் புதன்கிழமை காலை தொடங்கியது.மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்க... மேலும் பார்க்க

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தூய்மை பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் இது தொடர்பாக எழுப்... மேலும் பார்க்க