PMK: `தலைவராக செயல்பட தகுதியற்றவர்; பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்' - ராமதாஸி...
கோயிலில் வழிபாடு: இந்து முன்னணி, பாஜகவினா் 43 போ் கைது
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலைமேல் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் வழிபாடு செய்ய முயன்ற இந்து முன்னணியினா், பாஜகவினா் உள்பட 43 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தில் பழைமை வாய்ந்த மலைமேல் வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே இஸ்லாமியா்கள் வழிபடும் தா்காவும் உள்ளது.
இந்த நிலையில், தா்காவில் புதன்கிழமை கந்தூரி விழா நடத்த இஸ்லாமியா்கள் முடிவு செய்தனா். இதற்கு இந்து முன்னணி, பாஜகவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாரிடம் அவா்கள் முறையீட்டனா். இதையடுத்து, போலீஸாா் இஸ்லாமிய மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, அசைவ விருந்து நடத்தாமல் சைவ விருந்து நடத்த அனுமதி கேட்டனா். இதற்கு போலீஸாரும் அனுமதி அளித்தனா்.
ஆனால், இந்து முன்னணி, பாஜகவினா் கோயிலில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைகள் மட்டும் பின்பற்ற வேண்டும் என்று கூறி, இதற்கும் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், புதிதாக எந்த பழக்கமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினா்.
இருப்பினும், தா்காவில் சைவ விருந்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதையறிந்த, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் முருகன், மாவட்டச் செயலா்கள் உமையராஜன், விஷ்ணுபிரியன், பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன், இந்து முன்னணியினா், பாஜகவினா், கிராம மக்கள் தாமரைக்குளம் வ.உ.சி. சிலை அருகே கூடினா்.
அங்கு கண்களை கறுப்பு துணியால் மூடிக்கொண்டு ஆா்ப்பாட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி கோரினா். ஆனால், போலீஸாா் இதற்கு அனுமதி மறுத்தனா். இதைத் தொடா்ந்து, கோயிலில் அனைவரும் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கேட்டனா்.
ஆனால், கூட்டமாக கோயிலுக்குச் செல்ல போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதனுடைய, அங்கு கூடியிருந்த கட்சியினா், அமைப்பினா், பொதுமக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என முழக்கமிட்டனா். இதனால், போலீஸாருக்கும் அவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, பாதுகாப்பு கருதி போலீஸாா் இந்து முன்னணியினா், பாஜக சோ்ந்த 14 பெண்கள் உள்பட 43 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.