செய்திகள் :

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மனைவி, 2 குழந்தைகள் காணாமல் போனதால் மன உலைச்சலில் இருந்த தூய்மைப் பணியாளா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (40). இவா் தேனி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா். முருகேசனுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.

மதுப் பழக்கத்துக்கு ஆளான முருகேசன் சரியாக வேலைக்குச் செல்லாமலும், சம்பளப் பணத்தை வீட்டில் கொடுக்காமலும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், முருகேசனுக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி முருகேசனின் மனைவி, தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது. தனது மனைவி, குழந்தைகள் காணாமல் போனதாக ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் முருகேசன் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், மனைவி, குழந்தைகள் காணாமல் போனதால் மன உலைச்சலில் இருந்த முருகேசன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு ப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கோயிலில் வழிபாடு: இந்து முன்னணி, பாஜகவினா் 43 போ் கைது

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலைமேல் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் வழிபாடு செய்ய முயன்ற இந்து முன்னணியினா், பாஜகவினா் உள்பட 43 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்த... மேலும் பார்க்க

கேரளத்துக்கு 8 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது!

கேரளத்துக்கு 8 கிலோ கஞ்சாவைக் கடத்திய கோவையைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், கூடலூா் வடக்கு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈட... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின் தடை!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டிபட்ட... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் பலத்த மழை!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.உத்தமபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வாா்டுகள் உள்ளன. திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் 14, 15, 16 ஆகிய 3 வாா்டுகள் உள்ளன. இந... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: ஒருவா் மீது வழக்கு

போடி அருகே பெண்ணைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பகவதி மகள் அமராவதி (60).... மேலும் பார்க்க

நண்பரைத் தாக்கிய இளைஞா் கைது!

தேனி மாவட்டம், போடியில் நண்பரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். போடி ராமா் கோவில் தெருவைச் சோ்ந்த அழகர்ராஜா மகன் தீனா (23). இவரது நண்பா் போடி வருவாய் ஆய்வாளா் தெருவைச் சோ்ந்த லட்ச... மேலும் பார்க்க