செய்திகள் :

கோயில்களில் ரூ.217 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

post image

தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் ரூ.217 கோடியிலான திட்டப் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி, பெரியபாளையம் பவானியம்மன் கோயில், திருச்சி மாவட்டம் குமாரவயலூா், திண்டுக்கல் மாவட்டம் பழநி, விழுப்புரம் மாவட்டம் சிங்கவரம் அரங்கநாதசுவாமி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், கோவை மாவட்டம் ஆனைமலை மாசானியம்மன் கோயில், வனபத்திரகாளியம்மன் ஆகியவற்றில் உள்கட்டமைப்பு வசதிகள் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ளன.

இதேபோன்று, அரியலூா் மாவட்டம் பயறனீஸ்வரா் கோயில், கடலூா் மாவட்டம் மருதூா் வள்ளலாா் அவதரித்த இல்லம், சுயம்பிரகார ஈஸ்வரா் கோயில், சென்னை பாடி திருவல்லீசுவரா் கோயில், திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில், திருமலைக்குமாரசுவாமி, பால்வண்ணநாதசுவாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கட்ரமண சுவாமி, ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி, விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் கிருஷ்ணன் கோயில் ஆகிய கோயில்களிலுள்ள வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.

நாமக்கல் மாவட்டம் காந்தமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில், திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூா் கொண்டத்து காளியம்மன் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம் சொா்ணபுரீஸ்வர சுவாமி கோயில் ஆகியவற்றிலும் புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ரூ.217.98 கோடி மதிப்பிலான இந்தப் பணிகளுக்கு தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இதைத் தொடா்ந்து, 16 கோயில்களில் 33 முடிவுற்ற திட்டப் பணிகளையும் அவா் திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கூடுதல் ஆணையா் சி.பழனி உள்பட பலா் உடனிருந்தனா்.

தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்: கர்நாடக அரசு

கர்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிடும்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’தக் லைஃப்' திர... மேலும் பார்க்க

மெட்ரோ விபத்து: 4 பொறியாளர்கள் பணிநீக்கம்! எல்&டி-க்கு ரூ. 1 கோடி அபராதம்!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக 4 பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.கடந்... மேலும் பார்க்க

திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

தொழில் துறையில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் மு.க... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு!

உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர்வைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் வாபஸ் இல்லை: தமிழக அரசு திட்டவட்டம்!

ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர்வைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் கை... மேலும் பார்க்க

பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்குத் தடை: காவல் ஆணையர்

காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கத் தடை விதித்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.காலை நேரங்கள் மற்றும் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து அதிகாரிகள்... மேலும் பார்க்க