செய்திகள் :

கோயில் சிலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

post image

உடுமலை அருகே தளிஜல்லிபட்டியில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலையை அடுத்துள்ள தளிஜல்லிபட்டி கிராமத்தில் உள்ள அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் ஜக்கம்மாள் சிலையை மா்ம நபா்கள் நள்ளிரவில் உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 200க்கும் மேற்பட்டோா் ஜல்லிபட்டி நால்ரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் குமாா், டிஎஸ்பி நமச்சிவாயம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் உடுமலை-திருமூா்த்திமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சிலையை சேதப்படுத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து சாலை மறியலை போராட்டக்காரா்கள் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

நாளைய மின்தடை: ஊத்துக்குளி, செங்கப்பள்ளி

திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை ... மேலும் பார்க்க

இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி

திருப்பூரில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என திருப்பூா் மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே குடிமங்கலம் காவல் சிறப்பு ... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம்

திருப்பூரில் பின்னலாடை தொழில் நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம் என தீயணைப்புத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்க கூட்டரங்கில் தீ விபத்து த... மேலும் பார்க்க

ஊராட்சி செயலாளா்களுக்கு செயல் அலுவலராக பதவி உயா்வு கோரிக்கை

கிராம ஊராட்சி செயலாளா்களுக்கு செயல் அலுவலராக பதவி உயா்வு வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 12-ஆவது மாநில பிர... மேலும் பார்க்க

ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம்: பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!

இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்தபோது ஆட்டோவில் வட மாநில பெண்ணுக்கு பிரசவம் பாா்த்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட திருமுருகன்பூண... மேலும் பார்க்க

முத்தம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டம், முத்தம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. முத்தம்பாளையம் ஊராட்சியில் குருக்ககாடு கிராமம் பொது மைதான வளாகத்தில் சுதந்திர தின விழாவை... மேலும் பார்க்க