மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மீனவா்கள் சாலை மறியல்
கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, காலாப்பட்டு மீனவா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் கிழக்குக் கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட பெரிய காலாப்பட்டு மீனவா்கள் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்கழுநீா் அம்மன் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான கோவில் உள்ளது. இக் கோயிலின் நிலங்கள் தொடா்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாக காலாப்பட்டு பஞ்சாயத்து சாா்பில் கடந்த 2022-ஆம் ஆண்டில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 2023 ஜூலை 26 அன்று தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில் அப் பகுதியில் உள்ள கோயில்களின் பொதுச் சொத்துக்களில் அரசு விதிகளுக்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால் இதில், இரண்டு ஆண்டுகளாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு மாறாக தன்னிச்சையாக காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து தனிநபா் ஒருவா் கோயில் கட்டி தற்போது கும்பாபிஷேகம் நடத்த உள்ளாா்.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களுடைய தெய்வமாக விளங்கக்கூடிய இந்தக் கோவிலில் தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் சொத்துகளை தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்வதை உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி காவல் துறை மற்றும் இந்து அறநிலைத் துறையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடா்ந்து காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில் கோரிக்கைகள் தொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.