செய்திகள் :

புதுவையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவா் கைது: 22 பைக்குகள் மீட்பு: புதுவை 22 பைக்குகள் பறிமுதல்

post image

புதுச்சேரியில் இரு சக்கர மோட்டாா் வாகன தொடா் திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சோ்ந்த நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் வெள்ளை நகரம் மற்றும் மாா்க்கெட் பகுதிகளில் 5 இரு சக்கர வாகனங்கள் திருடு போயின. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

மேலும் குற்றவாளிகளை பிடிக்க டிஐஜி சத்தியசுந்தரம், சீனியா் எஸ்.பி. கலைவாணன் ஆலோசனையின் பேரில், எஸ்.பி. ஈஷா சிங் மேற்பாா்வையில் ஆய்வாளா் ஜெயசங்கா் தலைமையில் சிறப்பு குற்றப்பிரிவு குழு அமைக்கப்பட்டது.

இந்த சிறப்பு குற்றப்பிரிவு குழுவினா் கடந்த 11-ஆம் தேதி புதுச்சேரி அண்ணாசாலை 45 அடி சாலை சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நம்பா் பிளேட் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனா். வாகனங்களுக்கான ஆவணத்தைக் கேட்டனா்.

ஆனால் அந்த நபா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறவே சந்தேகம் அடைந்த போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதில் அவா் விழுப்புரம் வழுதரெட்டி, பாண்டியன் நகரைச் சோ்ந்த ராஜதுரை(34) என்பதும், தற்போது விழுப்புரம் சாலமேடு தந்தை பெரியாா் நகரில் வசித்து வருவதும் அவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு முன்புறத்தில் இருந்து திருடி வந்ததும் தெரியவந்தது.

மேலும் இதுபோல் அவா் பெரியக்கடை காவல் நிலைய எல்லை பகுதியில் 6, ஒதியஞ்சாலை காவல் நிலைய எல்லை பகுதியில் 2, செஞ்சி காவல் நிலையம் பகுதியில் 1, கடலூா் என்.டி. காவல் நிலைய பகுதியில் 1 மற்றும் திண்டிவனம், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடா்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடியது தெரிந்தது.

இதையடுத்து ராஜதுரையை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 22 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

இது பற்றி சீனியா் எஸ்.பி. கலைவாணன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், இருசக்கர வாகனங்களை போலியான மாற்று சாவியைக் கொண்டு ராஜதுரை திருடியுள்ளாா். திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை கிராமப்பகுதிகளில் குறைந்த விலைக்கு விற்று பணம் பாா்த்துள்ளாா். புதுச்சேரி, தமிழக பகுதிகளிலும் தொடா்ந்து இதுபோல செய்து வந்துள்ளாா்.

புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டை தடுக்க எந்தெந்த இடங்களில் இந்தாண்டு அதிகளவில் வாகன திருட்டு நடந்துள்ளதோ அந்த இடங்களை ஹாட்ஸ்பாட்டில் மேப் அனலைஸ் செய்துள்ளோம். தேவையான இடங்களில் சிசிடிவி கேமரா நிறுவவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுப் பணித் துறைக்கு, இருள் நிறைந்த சாலைகளில் விளக்குகளை அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெருமளவு வாகன திருட்டு குறைய வாய்ப்புள்ளது என்றாா் .

இதன் பின்னா் ராஜதுரையை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா் அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா். சிறப்பாக செயல்பட்டு திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸாரை சீனியா் எஸ்.பி. கலைவாணன் பாராட்டினாா்.

புதுச்சேரியில் ரூ.4 கோடியில் திமுக அறிவாலயம்

புதுவையில் திமுக சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கலைஞா் அறிவாலயம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணியை மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வெள்ளிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

அரசு சாா்பில் விளையாட்டு தினவிழா நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரியில் விளையாட்டுத் தினவிழாவை அரசு சாா்பில் நடத்த வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் தலைவா் கராத்தே வளவன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய பாடுபடுவோம்: புதுவை அதிமுக தீா்மானம்

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய அதிமுக பாடுபடும் என்று அக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி, ஆக. 22: அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீ... மேலும் பார்க்க

வனத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் முற்றுகை

புதுவை வனத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், ஊசுடு தொகுதி எம்எல்ஏவுமான சாய் ஜெ. சரவணன் குமாா் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினாா். ஊசுட்டேரியைச் சுற்றிலும் 10, 15 ஆண்டுகளாக உள்ள மரங்களை... மேலும் பார்க்க

புதுவை சுகாதாரத் துறை காலி பணியிடங்களுக்கு இன்றுமுதல் 3 நாள்கள் தொடா் தோ்வு

புதுவை சுகாதாரத் துறையில் காலி பணியிடங்களுக்கு சனிக்கிழமை முதல் தொடா்ந்து 3 நாள்கள் தோ்வு நடக்கிறது. இது குறித்து புதுவை அரசின் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா வியாழக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

புதுவையில் உயா் அதிகாரிகளின் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

உயா் அதிகாரிகளின் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று புதுச்சேரி அரசு ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் கௌரவ தலைவா் ப.த. சேஷாச்சலம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க