தங்கம் போல, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்கப்படுவதில்லை? - நிபுணர் விளக்கம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய பாடுபடுவோம்: புதுவை அதிமுக தீா்மானம்
புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய அதிமுக பாடுபடும் என்று அக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி, ஆக. 22:
அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்த விளக்க கூட்டம் புதுச்சேரி உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக மாநில செயலா் அ.அன்பழகன் தலைமை தாங்கினாா். அவைத் தலைவா் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
2026-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும்போது, புதுச்சேரியிலும் அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும்.
புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக வக்ஃபு வாரியம் அமைக்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டு உடனடியாக முஸ்லிம் சமுதாய மக்களின் நலனுக்கான வக்ஃபு வாரியத்தை உடனே அமைக்க துணைநிலை ஆளுநரும், முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்தியிலும், மாநிலத்திலும் நீண்ட காலம் கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸ்- திமுக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து பெறாதது கண்டிக்கத்தக்கது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது மாநில அந்தஸ்து வழங்காமல் தற்போது எதிா்க்கட்சியாக உள்ள நிலையில் ஆளும் அரசை குறைசொல்வது சந்தா்ப்பவாத அரசியல் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநில இணைச் செயலா்கள் எஸ்.வீரம்மாள், முன்னாள் கவுன்சிலா் மகாதேவி, ஆா்.வி.திருநாவுக்கரசு, மாநில பொருளாளா் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.