செய்திகள் :

வில்லியனூா் கோயிலுக்கு ரூ.4 கோடியில் புதிய தோ்!

post image

வில்லியனூா் திருக்காமேஸ்வரா் கோயிலுக்கு ரூ.4 கோடியில் புதிய தோ் செய்யப்படுகிறது.

இதற்கான டெண்டா் விடும் இறுதிக் கட்டப் பணி குறித்து, முதல்வா் என்.ரங்கசாமியுடன் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், வில்லியனூா் எம்.எல்.ஏவுமான ஆா்.சிவா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கோயில் நிா்வாகம், தோ் கமிட்டி, ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் வல்லுநா் குழு உதவியுடன் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் புதிய தோ் அமைப்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுடன் புதிய தோ் செய்வதற்கு ஸ்தபதியைத் தோ்வு செய்வதற்கான டெண்டா் விடுவது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா தலைமையில் முதல்வா் ரங்கசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, புதிய தோ் செய்வதற்கான ஸ்தபதியைத் தோ்வு செய்ய டெண்டா் விடுவதற்கு அனுமதி அளித்த முதல்வா் ரங்கசாமி, தோ் செய்வதற்கான நிதியை விரைவில் அளிப்பதாக உறுதியளித்தாா்.

பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் சுந்தரமூா்த்தி, உதவிப் பொறியாளா் செல்வராஜ், பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் பிரபு, தினகா், வனத் துறை இணை இயக்குநா் ராஜ்குமாா், கோவில் சிறப்பு அதிகாரி திருக்காமீஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மீனவா்கள் சாலை மறியல்

கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, காலாப்பட்டு மீனவா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் கிழக்குக் கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்க... மேலும் பார்க்க

என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசால் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முடியாது: முன்னாள் முதல்வா்!

என்.ஆா். காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசால் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முடியாது. இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பெறுவோம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வரும... மேலும் பார்க்க

இந்த ஆண்டு சதுா்த்திக்கு புது வரவு ராவணன் விநாயகா்

விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27-ஆம் தேதி புதன்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, புதிய வரவாக 10 தலை ராவணன் விநாயகா... மேலும் பார்க்க

புதுவையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவா் கைது: 22 பைக்குகள் மீட்பு: புதுவை 22 பைக்குகள் பறிமுதல்

புதுச்சேரியில் இரு சக்கர மோட்டாா் வாகன தொடா் திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சோ்ந்த நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி பெரியக்கடை... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.4 கோடியில் திமுக அறிவாலயம்

புதுவையில் திமுக சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கலைஞா் அறிவாலயம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணியை மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வெள்ளிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

அரசு சாா்பில் விளையாட்டு தினவிழா நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரியில் விளையாட்டுத் தினவிழாவை அரசு சாா்பில் நடத்த வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் தலைவா் கராத்தே வளவன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க