செய்திகள் :

கோலிக்கே 4-வது இடம்தான்; சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகையை விட அதிக சம்பளம் பெறும் 6 IPL வீரர்கள்!

post image

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் (இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்) தொடங்கவிருக்கிறது. ஒருநாள் போட்டியில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படுகிறது. மார்ச் 9-ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி முடிந்த அடுத்த இரண்டு வாரத்தில் இந்தியாவில் ஐ.பி.எல் தொடங்குகிறது.

Champions Trophy

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ. 19.45 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்திருக்கிறது. இவ்வாறிருக்க, சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை விட ஐ.பி.எல்லில் ஆறு வீரர்கள் அதிகம் சம்பளம் பெறுவது தற்போது தெரியவந்திருக்கிறது. அந்த ஆறு பேரில் நான்கு பேர் இந்திய வீரர்கள். இரண்டு பேர் வெளிநாட்டு வீரர்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்...

1. ரிஷப் பண்ட் - ரூ. 27 கோடி

2022-ல் கார் விபத்துக்குள்ளான பண்ட், 2024-ல் முழுமையாகக் குணமடைந்து கடந்த ஐ.பி.எல் சீசனில் டெல்லி அணியின் கேப்டனாகக் கம்பேக் கொடுத்தார். இருப்பினும், கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக டெல்லி அணியிலிருந்து தாமாக வெளியேறி ஏலத்தில் பெயரைப் பதிவுசெய்தார். அப்போதே, ஏலத்தில் பண்ட்தான் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று பேச்சுகள் அடிபட்டன. அதற்கேற்றாற்போல, ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்.

ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட்

2. ஸ்ரேயாஸ் ஐயர் - ரூ.26.75 கோடி

கடந்த ஐ.பி.எல் சீசனில் ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில்தான் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனாலும், மெகா ஏலத்துக்கு முன்பாக கொல்கத்தா அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதில், ரிஷப் பண்ட்டுக்கு அடுத்த அதிகபட்ச தொகையாக ரூ. 26.45 கோடிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது.

3. வெங்கடேஷ் ஐயர் - ரூ. 23.75 கோடி

ஐ.பி.எல்லில் கடந்த சில ஆண்டுகளாகக் கொல்கத்தா அணியில் நிலையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் ஐயரும் ஏலத்துக்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் ஏலத்தில் அதே கொல்கத்தா அணியால் ரூ. 23.74 கோடிக்கு வாங்கப்பட்டார்.

வெங்கடேஷ் ஐயர் - ஹென்ரிச் க்ளாசென்

4. ஹென்ரிச் க்ளாசென் - ரூ. 23 கோடி

கடந்த ஐ.பி.எல் சீசனில் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முக்கியப் பங்காற்றிய தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்ரிச் க்ளாசென். இவரை ஏலத்துக்கு விடாமல் ரூ. 23 கோடிக்கு ஐதராபாத் அணி தக்கவைத்துக் கொண்டது.

விராட் கோலி - நிகோலஸ் பூரான்

5. விராட் கோலி - ரூ. 21 கோடி

2008-ல் ஐ.பி.எல் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுநாள் வரைக்கும் ஒரே அணியில் ஆடிவரும் விராட் கோலியை பெங்களூரு அணி ஏலத்துக்கு விடாமல் ரூ. 23 கோடிக்கு தக்கவைத்திருக்கிறது

6. நிகோலஸ் பூரான் - ரூ. 23 கோடி

வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரானை ரூ. 21 கோடிக்கு லக்னோ அணி ஏலத்தில் விடாமல் தக்கவைத்துக்கொண்டது.

Kerala: மேட்சை காப்பாற்றிய ஹெல்மெட்... ரஞ்சி வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறிய கேரளா

நடப்பு ரஞ்சி டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பிப்ரவரி 26-ம் ரஞ்சி டிராபி பைனல் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு, பிப்ரவரி 17-ம் தேதி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒன்றில், விதர்பாவு... மேலும் பார்க்க

Dhoni: `மன்னிக்கப் பழகுங்கள்; கடந்து செல்லுங்கள், அது வாழ்க்கையில்..!' - தோனி சொல்லும் அட்வைஸ்

தோனி, கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 ... மேலும் பார்க்க

Mohammed Shami: ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்... அகர்கார், ஜாகீர் கானை தனித்தனியே முந்திய ஷமி!

சாம்பியன்ஸ் டிராபியில் பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், இரண்டு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியத... மேலும் பார்க்க

Champions Trophy: அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் ஹர்ஷித் ராணா - ரசிகர்கள் அதிருப்தி ஏன்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கான முதல் போட்டி தொடங்கியிருக்கிறது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 பேர் கொண்ட அணி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் த... மேலும் பார்க்க

Champions Trophy: முதல் ஆட்டத்திலேயே காயம்... தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அதிரடி வீரர்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியே நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கும், முன்னாள் சாம்பியன் நியூசிலாந்துக்கு நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50... மேலும் பார்க்க

CT: 2013 `Magic' தோனி ; 2017 `Unlucky' கோலி - என்ன செய்யப்போகிறார் ரோஹித்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 8 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தொடங்கியிருக்கிறது. கடைசியாக நடந்த இரண்டு சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியா பைனலுக்குச் சென்றிருந்தது. அதில், ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி. இதனா... மேலும் பார்க்க