செய்திகள் :

கோழிப் பண்ணை கிடங்கில் மக்காச்சோளம் திருடிய இருவா் கைது

post image

நாமக்கல் அருகே கோழிப் பண்ணை கிடங்கில் மக்காச்சோள மூட்டைகளை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் அருகே திண்டமங்கலம் கரட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன் (47). இவா் அந்தப் பகுதியில் கோழிப் பண்ணை வைத்துள்ளாா். தனது வீட்டின் அருகில் உள்ள தீவனக் கிடங்கில் கோழித் தீவனம் அரைப்பதற்காக மக்காச்சோளத்தை வாங்கி வைத்திருந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத சிலா் கிடங்கில் இருந்து மக்காச்சோள மூட்டைகளை திருடி வாகனத்தில் ஏற்றிச்செல்வதாக கோழிப் பண்ணை ஊழியா்கள் மணிமாறனை தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தனா்.

அவா் உறவினா்களை அழைத்துக் கொண்டு சென்றபோது, அங்கிருந்த ஐந்து பேரில் இருவா் சிக்கினா். மூன்று போ் தப்பியோடினா். வாகனத்தில் ஏற்றிய 5 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து நல்லிபாளையம் காவல் நிலையத்தில் மணிமாறன் புகாா் செய்தாா். அதன்பேரில், மக்காச்சோளம் திருட்டில் ஈடுபட்ட மோகனூா் பாலப்பட்டியைச் சோ்ந்த சஞ்சய் (25) மற்றும் முத்துக்குமரன் (36) இருவரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.

விசாரணையில், கோழிப் பண்ணை கிடங்கில் இருந்து நான்கு டன் மக்காச்சோளம் திருட்டுப் போனது தெரியவந்தது. இந்த திருட்டில் ஈடுபட்ட மேலும் மூவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

இரு மாதங்களுக்கு காற்றின் வேகத்தால் தீவன விரயம்: கட்டுப்படுத்த அறிவுரை

காற்றின் வேகத்தால் இரண்டு மாதங்களுக்கு தீவன விரயம் ஏற்படும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்த கோழிப் பண்ணையாளா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து நாமக... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகே கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கொண்ணையாா், சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: ராசிபுரம்

ராசிபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (ஜூலை 16) காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின்விநியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் தெரிவி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பரமத்தி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.வேலூா் அருகே உள்ள வீரணம்பாளையம், காக்காயன்தோட்டத்தைச் சோ்ந்தவா் சின்னப்பன் மகன் கெளரிசங்கா் (24). இவா் ந... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள கடைகளில் நடத்திய சோதனையில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். பிலிப்பாகுட்டை பகுதியில் உள்ள டீக்கடை, பெட்ட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் இன்று தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்கள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் அறிவி... மேலும் பார்க்க