செய்திகள் :

கோவா முதல்வரை குற்றஞ்சாட்டிய நடிகர் மீது வழக்கு!

post image

கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவாந்த் மீது குற்றம்சுமத்திய நடிகர் கௌரவ் பக்‌ஷி மீது அம்மாநில குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவா மாநிலத்தில், உச்ச நீதிமன்ற அறுவுறுத்தல்களை மீறி முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் அவரது அரசு அம்மாநிலத்தின் வனப்பகுதியை அழித்து வருவதாகக் குற்றம்சுமத்தி நடிகர் கௌரவ் பக்‌ஷி விடியோ ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மக்களிடம் அச்சத்தை உருவாக்க தவறான தகவல்களுடன் விடியோ வெளியிட்டுள்ளதாக, நடிகர் பக்‌ஷி மீது கடந்த ஜூலை 2 ஆம் தேதி துணை வனப் பாதுகாப்பாளர் ஆதித்யா மதன்பத்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்மூலம், நடிகர் பக்‌ஷி மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 353 (1) மற்றும் 196 (1) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, நடிகர் கௌரவ் பக்‌ஷி நேற்று (ஜூலை 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், காடுகள் குறைந்து வருவது குறித்து சமூக ஊடகங்களில் தான் பேசியதற்காக, தன் மீது பொய்யான மற்றும் அற்பமான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இத்துடன், கடந்த ஜூலை 4 ஆம் தேதி காவல் துறை அதிகாரிகள் எந்தவொரு காரணமும் கூறாமல், தனது வீட்டிற்கு வந்து தன்னை விசாரணைக்கு அழைத்ததாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளைக் கடந்த காலத்திலும் தான் சந்தித்தபோது நீதிமன்றங்கள் தன்னைக் காப்பாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், குற்றப்பிரிவு அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கொடுக்க மறுத்தாகக் குற்றம்சாட்டிய அவர், முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

The state's Crime Branch police have registered a case against actor Gaurav Bakshi, who has accused Goa Chief Minister Pramod Sawant.

இதையும் படிக்க: டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை!

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க