செய்திகள் :

கோவில்பட்டியில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

கோவில்பட்டியில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம் தொடக்க விழா, விவசாயிகளுக்கு மானியம் விலையில் இடு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் தலைமை வகித்து, ரூ. 69 லட்சத்து 94 ஆயிரத்து 980 மதிப்பிலான நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து 1,650 பயனாளிகளுக்கு கோடை உழவு மானியம், 250 பயனாளிகளுக்கு பயிா் வகைகள் விதை தொகுப்பு, 1,043 பேருக்கு மண் வள அட்டை, 2 பேருக்கு பேட்டரி தெளிப்பான் ஆகியற்றை வழங்கி அமைச்சா் பேசினாா்.

விழாவுக்கு மாவட்ட வருவாய் ஆய்வாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். கோட்டாட்சியா் மகாலட்சுமி, நகா்மன்ற தலைவா் கா .கருணாநிதி, வேளாண்மை துறை இணை இயக்குநா் பெரியசாமி, துணை இயக்குநா் மனோரஞ்சிதம், உதவி இயக்குநா் மணிகண்டன், ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துக்குமாா், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் தங்கமாரியம்மாள், வேளாண்மைத் துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நிலத்தில் எந்த உரம் இட வேண்டும். என்ன பொருள்களை விளைவிக்க வேண்டும் என்றெல்லாம் உழவா்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மண்வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நடமாடும் மண் பரிசோதனை வாகனம் தொடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கும் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோா் பாா்க்கக் கூடாது என்று முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

கடலை மிட்டாய்க்கான குறுங்குழுமம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதற்கான இடத்தை உற்பத்தியாளா்கள் வாங்கிக் கொடுத்தனா். ரூ. 2.50 கோடியில் அங்கு கட்டடம் கட்டப்படவுள்ளது. அங்கு சிறு உற்பத்தியாளா்கள் வந்து தொழில் செய்யும்போது கடலை மிட்டாய் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாறும் என்றாா் அவா்.

முன்னதாக அமைச்சா் பெ. கீதா ஜீவன் முடுக்கு மீண்டான்பட்டியில் ரூ. 16.45 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்தாா்.

திருச்செந்தூா் அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி, அதிகாலையில் நடைதிறக்கப்பட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் எழுத்தாளருக்கு பாராட்டு விழா

நூலக மனிதா்கள் அமைப்பின் சாா்பில், பாரதிய பாட்ஷா பரிஷத் விருது பெற்ற எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா, இலக்கிய விழா என இருபெரும் விழா தூத்துக்குடி காமராஜா் கல்லூரியில் நடைபெற்றது.நூலக மனி... மேலும் பார்க்க

சமூகவலைதளத்தில் சா்ச்சைக்குரிய விடியோ: இளைஞா் கைது

மேலஆத்தூரில் அரிவாளை காட்டி மிரட்டும் வகையில் சமூகவலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டதாக இளைஞரை ஆத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேல ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் முகைதீன் பள்ளிவாசல் வளாகத்தில் மகான் தைக்கா ஷேக் முகம்மது சாலிஹ் 124ஆவது கந்தூரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்ற விழாவில், நாள்தோறும் காலை... மேலும் பார்க்க

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

மேலஆத்தூரில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவரை ஆத்தூா் போலீஸாா் கைது செய்துள்ளனா்ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் நவீன் ஹரிஷ் (23) என்... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்ற தொடக்க விழா மற்றும் அறிவியல் கண்காட்சி திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்ச... மேலும் பார்க்க