கோவில்பட்டி அருகே திருட்டு வழக்கு: 4 போ் கைது
கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களை திருடிச் சென்றது தொடா்பான வழக்கில் 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே புது அப்பனேரி சக்கரபாணி நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் நல்லசிவன்(67). இவரது வீட்டில் அண்மையில் 20 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்கள் திருடு போயின.
இதுகுறித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் அகரம்தேன் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த தனிஷ்லாஸ் மகன் மோகன் என்ற சகாயராஜ்(48), திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி பாலாஜி நகா் ரமேஷ்பாபு மகன் சதீஷ்(37), விருதுநகா் மாவட்டம் சாத்தூா் காமராஜா் நகா் சுப்பையா மகன் முத்துராஜா(43), சென்னை அம்பத்தூா் பானு நகா் ராதாகிருஷ்ணன் மகன் பொன்முருகன்(53) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 16.5 பவுன் தங்கக்கட்டி, அரை கிலோ வெள்ளிக்கட்டி ஆகியவற்றை மீட்டனா்.