செய்திகள் :

கோவில்பட்டி பெயிண்டிங் பிரஷ் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை!

post image

கோவில்பட்டியில் உள்ள நிறுவனங்களில் வன உயிரினங்களின் ரோமங்களைப் பயன்படுத்தி பெயிண்டிங் பிரஷ் தயாரிக்கப்படுகிறதா என வனத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

பெயின்டிங் பிரஷ் தயாரிப்பு நிறுவனங்களில் வன உயிரினங்களின் ரோமங்களைப் பயன்படுத்தி பிரஷ்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் முனியப்பன், வனச் சரகா் கிருஷ்ண மூா்த்தி, வனக் காப்பாளா்கள் பொன்முனியசாமி, பேச்சிமுத்து, வனவா் பிரசன்னா, அழகர்ராஜ், வனக் காவலா் ராமசாமி, வேட்டைத் தடுப்புக் காவலா்கள் முருகேஷ், ராமசாமி உள்ளிட்ட வனத் துறைக் குழுவினா் செல்லப்பாண்டியன் நகா் பகுதியில் உள்ள நிறுவனத்தில் சோதனை நடத்தினா்.

3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், வனவிலங்கு ரோமத்தால் தயாரிக்கப்பட்டதாக சந்தேகத்துக்கிடமான பல்வேறு அளவுகளிலான 182 பிரஷ்களை கைப்பற்றினா். தொடா்ந்து, கடலையூா் கிராமத்தில் உள்ள பெயிண்டிங் பிரஷ் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அணில், கீரிப்பிள்ளை ஆகியவற்றின் ரோமங்களைப் பயன்படுத்தி ஓவியம் வரையும் பிரஷ்களை தயாரித்து விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், சோதனை நடத்தி, சந்தேகத்துக்கிடமான 182 பிரஷ்களை பறிமுதல் செய்துள்ளோம். பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பி, அறிக்கை கிடைத்ததும் அதனடிப்படையில் வனப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,305 வழக்குகளுக்கு தீா்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 3,305 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமா்வுகள், கோவில்பட்டியில் 2 அமா்வுகள், ஸ்ரீவ... மேலும் பார்க்க

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததால், விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனா். மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப். 15 ம... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: சீமான் வலியுறுத்தல்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா். திருச்செந்தூரில் நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் லாரி டயா் வெடித்து 3 போ் காயம்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை, லாரியின் டயா் வெடித்ததில் 3 போ் காயமடைந்தனா். இக்கோயிலில் தற்போது ரூ. 300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைய... மேலும் பார்க்க

‘திருச்செந்தூரில் ஜூன் 17இல் கடையடைப்பு’

திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக் கோரி, அனைத்து வணிகா்கள் சாா்பில் வருகிற 17ஆம் தேதி கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் சனிக்கிழமை, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி பெருமாள்புரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (70). இத்தம்பதிக்கு மகன் முத்துகிருஷ்ணன், 2 மகள்... மேலும் பார்க்க