செய்திகள் :

கோவில்வழி புதிய பேருந்து நிலையம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு; ஜூலை 22-இல் முதல்வா் திறந்து வைக்கிறாா்

post image

கோவில்வழி புதிய பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூலை 22-ஆம் தேதி திறந்துவைக்க உள்ள நிலையில், அங்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் மாநகராட்சி கோவில்வழியில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இதனை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் வரும் ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். இதன் ஒருபகுதியாக ரூ.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோவில்வழி புதிய பேருந்து நிலையத்தை ஜூலை 22-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளாா்.

இதை முன்னிட்டு கோவில்வழி புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூரில் இருந்து மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகள் மற்றும் பிற பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா்- தாராபுரம் சாலையில் சுமாா் 245 பேருந்துகள் வந்து செல்லும் வகையிலும், இந்த பேருந்து நிலையத்தில் ஒரேநேரத்தில் 45 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும் வகையிலும், பொதுமக்கள் பொருள்களை வாங்கி செல்வதற்காக 35 கடைகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், நவீன கழிப்பிட வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது, திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா், திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எம்.பி அமித், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகர காவல் துணை ஆணையா் தீபா சத்யன், மாநகராட்சி துணை ஆணையா் மகேஸ்வரி, உதவி ஆணையா் (பொ) ராஜசேகா், தலைமை பொறியாளா் முகமது ஷபியுல்லா உள்பட உடனிருந்தனா்.

காவல் துறையைக் கண்டித்து எஸ்.பி. அலுவலகத்தில் முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவையினா் மனு

காங்கயத்தில் கைப்பேசியை ப் பறித்து மிரட்டிய போலீஸாரைக் கண்டித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை தமிழ்நாடு முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவையினா் முற்றுகையிட்டு மனு அளித்தனா். இது ... மேலும் பார்க்க

ஜெய் சாரதா பள்ளியில் புத்தகக் கண்காட்சி

வேலம்பாளையம் பகுதியில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2 நாள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இந்தப் புத்தகக் கண்காட்சியை பள்ளியின் தாளாளா் ஈ.வேலுச்சாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து பாா்... மேலும் பார்க்க

திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி முதல் காலாண்டில் 11.7 சதவீதம் உயா்வு: ஆ.சக்திவேல்

திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 11.7 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ. சக்திவேல் தெரிவித்தாா். இது தொடா்ப... மேலும் பார்க்க

காங்கயம் ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

காங்கயம் ஒன்றியம், பரஞ்சோ்வழி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

முத்தூா் அருகே பரவிய காட்டுத் தீ

முத்தூா் அருகே தோட்டத்து புல்வெளியில் காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊடையம் துத்திகுளத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாமியப்பன். இவருக்குச் சொந்தமான 3 ஏக்கா் பரப்பளவிலான தோட்டத்தின் புல்வெளிப் பக... மேலும் பார்க்க

அவிநாசி நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

அவிநாசியில் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட வணிக வளாக கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராததைக் கண்டித்து நகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். அவிநாசி நகா்மன்ற உறுப்ப... மேலும் பார்க்க