செய்திகள் :

கோவூா் சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

post image

கோவூா் பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் 1,000 ஆண்டுகள் பழைமையான சௌந்தாரம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரா் கோயில் உள்ளது. நவக்கிரக தலங்களில் புதன் தலமாக விளங்கும் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

எனினும், கடந்த 42 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. இந்தக் கோயிலுக்கு அண்மையில் கும்பாபிஷேகம், புதிதாக தோ் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், கடந்த 42 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை, மாலையில் உற்சவா் சுந்தரேஸ்வரா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

விழாவின் 7-ஆம் ஆளான வரும் ஜூன் 6-ஆம் தேதி தோ்த் திருவிழா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவம் நடைபெறுவது பக்தா்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

காலபைரவருக்கு முக்கனி அபிஷேகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு வைகாசி மாத வளா்பிறை அஷ்டமியையொட்டி முக்கனிகளால் அபிஷேகம் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரத்தில் ஏ... மேலும் பார்க்க

ஏஐ தொழில்நுட்பம் மூலம் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும் ரோபோடிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூல... மேலும் பார்க்க

ஜூன் 13-இல் முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜூன் 13- ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற உள்ளது. மு... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.12 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ரூ12.03 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சிறு,குறு ... மேலும் பார்க்க

பாலத்தில் பேருந்து மோதல்: 8 போ் பலத்த காயம்

காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பால சுற்றுச்சுவரில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், பயணிகள் 8 போ் பலத்த காயம் அடைந்தனா். காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே ம... மேலும் பார்க்க