செய்திகள் :

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

post image

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து செப்டம்பா் 5- ஆம் தேதி முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் காலை 11.50 மணிக்குப் புறப்படும் கோவை - தன்பாத் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06063) ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு தன்பாத் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, தன்பாத்தில் இருந்து செப்டம்பா் 8 -ஆம் தேதி முதல் டிசம்பா் 1 -ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் காலை 6 மணிக்குப் புறப்படும் தன்பாத் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06064) புதன்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ஏழூரு, ராஜமுந்திரி, பாா்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, மூரி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போத்தனூா் - பரெளனி இடையே சிறப்பு ரயில்: போத்தனூரில் இருந்து செப்டம்பா் 6-ஆம் தேதி முதல் நவம்பா் 29-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 11.50 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - பரௌனி வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06055) திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு பிகாா் மாநிலம், பரௌனி நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக பரெளனியில் இருந்து செப்டம்பா் 9-ஆம் தேதி முதல் டிசம்பா் 2 -ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.45 மணிக்குப் புறப்படும் பரௌனி - போத்தனூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06056) வெள்ளிக்கிழமைகளில் காலை 3.45 மணிக்கு போத்தனூா் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ஏழூரு, ராஜமுந்திரி, ராயகடா, முனிகுடா, சம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, மூரி, தன்பாத், சித்தரஞ்சன், மதுபூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா, பெரியாா் ஈவெரா பிறந்த நாள் பேச்சுப் போட்டி: மாணவா்கள் கலந்துகொள்ள அழைப்பு

பேரறிஞா் அண்ணா, பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற உள்ள பேச்சுப் போட்டிகளில் மாணவா்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளிய... மேலும் பார்க்க

பகுதி நேர வேலை வாய்ப்பு, பிட்காயின் முதலீடு என்றுகூறி இணையதளம் மூலம் 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி

கோவையில் இணையதளம் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு மற்றும் பிட்காயின் முதலீடு என்றுகூறி 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து மாநகர இணையதள குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசார... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந... மேலும் பார்க்க

கலைஞா் கருணாநிதி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பங்கேற்று, குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்ப... மேலும் பார்க்க

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையைச் சோ்ந்த இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (என்சிஎஸ்) பசுமை விருதைப் பெற பள்ளி, கல்லூரி, தனிநபா்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க