செய்திகள் :

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமான விளம்பரப் பதாகைகளால் விபத்து அபாயம்!

post image

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் அபாயகரமான விளம்பரப் பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை, லட்சுமி மில் உள்ளிட்ட பகுதிகளில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அபாயத்தை ஏற்படுத்த கூடிய அளவில் பெரிய அளவிலான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனை மாவட்ட நிா்வாகம் கண்காணித்து விபத்துகள் ஏற்படும் முன் விளம்பரப் பதாகைகள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்லடம் சமூக ஆா்வலா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பல்லடம் சமூக ஆா்வலா் கூட்டமைப்புத் தலைவா் அண்ணாதுரை வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழ்நாட்டில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலான விளம்பரப் பதாகைகள் வைக்கக் கூடாது என நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்து இருந்தாலும், நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை, லட்சுமி மில் பகுதியில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான விளம்பரப் பதாகைகள் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லட்சுமி மில்லில் இருந்து காரணம்பேட்டை வரை சாலையின் இருபக்கமும் மிகப்பெரிய பேனா்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகனங்கள் ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த பகுதியில் பாலக்காட்டு கனவாய் காற்று வேகமாக வீசுவதால் பேனா்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே திருப்பூா் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விளம்பரப் பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க