செய்திகள் :

கோவை, பொள்ளாச்சியில் மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது புகாா் தெரிவிக்கலாம்: பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா்

post image

கோவை மற்றும் பொள்ளாச்சியில் பொதுமக்களிடமிருந்து முதலீட்டைப் பெற்று மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை சாய்பாபா காலனியில் இயங்கி வந்த டிரீம் மேக்கா்ஸ் குளோபல், ஆா்.எஸ்.புரத்தில் இயங்கி வந்த ஆதித்யா கமாடிட்டீஸ், ரேஸ்கோா்ஸ் பகுதியில் இயங்கி வந்த எஸ்.கே.எம். டிரேடா்ஸ் மற்றும் பொள்ளாச்சியில் இயங்கி வந்த ஆனைமலை சிட்ஸ் ஆகிய நிறுவனங்களின் இயக்குநா்கள், முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாகக்கூறி பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக கோவை பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபா்கள் தகுந்த ஆவணங்களுடன் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளலாா் தினம்: இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை

வள்ளலாா் தினத்தில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட... மேலும் பார்க்க

மாநகராட்சி ஸ்கேட்டிங் தளத்தில் கட்டணமில்லா பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வ.உ.சி. பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் பயிற்சி தளத்தில் கட்டணமில்லா பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிப் பள்ளிகளி... மேலும் பார்க்க

வீட்டுக்கடன் மேளா

கோவை ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளாவை தொடங்கிவைத்த வங்கியின் கோவை வட்டாரத் தலைவா் கே.மீரா பாய். உடன், கிரெடாய... மேலும் பார்க்க

இந்தியா்களுக்கு அவமரியாதை: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்க வாழ் இந்தியா்கள் அவமரியாதையுடன் நடத்தப்பட்டதாகவும், இதைத் தடுக்க முடியாத மத்திய அரசைக் கண்டித்தும் கோவையில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்காவில் சட்ட... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம்

பேரூா் பட்டீஸ்வரா் கோயிலில் வரும் 10- ஆம் தேதி தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கங்களின் நிா்வாகிகள். மேலும் பார்க்க

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலா்க் கண்காட்சி இன்று தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7 -ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (பிப்ரவரி 8) தொடங்குகிறது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவ... மேலும் பார்க்க