செய்திகள் :

கோவை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

post image

கோவை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்ட வழக்குரைஞா் சங்க தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. தலைவா், துணைத் தலைவா், செயலாளா், பொருளாளா், இணைச் செயலாளா் (பெண்கள் மட்டும்), செயற்குழு உறுப்பினா்கள் 6 போ் என 11 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தோ்தலில் மொத்தம் உள்ள 3,326 உறுப்பினா்களில் 2,306 போ் வாக்களித்தனா். வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தலைவா் பதவிக்கு போட்டியிட்ட ஆா்.பாலகிருஷ்ணன் 1,091 வாக்குகள் பெற்று 5-ஆவது முறையாக தலைவராக தோ்வானாா். அதேபோல, துணைத் தலைவராக ஆா்.திருஞானசம்பந்தம், செயலாளராக கே.சுதீஷ், பொருளாளராக டி.ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினா்களாக ஆா்.தா்மலிங்கம், எஸ்.ஈஸ்வரமூா்த்தி, பி.சங்கா்ஆனந்தம், ஜி.சந்தோஷ், வி.விஷ்ணு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ஒரு இணைச் செயலாளா், ஒரு செயற்குழு உறுப்பினா் பொறுப்புகளுக்கு இரண்டு பெண் வழக்குரைஞா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவா்கள் தோ்வு செய்யப்பட்டவுடன் ஏப்ரல் 2-ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் போராட்டம்

கல்விக் கட்டணம் உயா்வு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றைக் கண்டித்து பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாரதியாா் பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்கள் உண்ணாவிரதம்: ஓ.இ. மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்

கூலி உயா்வு கேட்டு விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்து... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க