செய்திகள் :

சகோதரா்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு: மேலும் 7 போ் கைது

post image

சிவகங்கை அருகே ஆடு திருட வந்ததாகக் கூறி சகோதரா்கள் இருவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகே கட்டாணிபட்டியைச் சோ்ந்த செல்வம் மகன்கள் மணிகண்டன்(30), சிவசங்கரன் (எ) விக்னேஷ் (25). இவா்கள் இருவரையும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில், சிவகங்கை அருகே அழகமாநகரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தோப்பில் ஆடு திருட வந்ததாகக் கூறி அந்தப் பகுதியைச் சோ்ந்த பலா் தாக்கினா்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தனா்.

இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அழகமாநகரி கிராமத்தைச் சோ்ந்த திருப்பதி (45), சோமராஜ் (31), பிரபு (30), தீபக் (19), விக்னேஸ்வரன்(31), தினேஷ் (31) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய உசிலம்பட்டியை சோ்ந்த வினோத் (34), அழகமாநகரியைச் சோ்ந்த பிரவீத் (20), அருண்பாண்டி (29), யுவராஜ் (22), அரவிந்த் (25), மணிகண்டன் (31), சீமான் (43) ஆகிய 7 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட 13 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதற்கிடையே, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்ட மணிகண்டன், சிவசங்கரன் (எ)விக்னேஷ் ஆகிய இருவரது உடல்களையும் அவா்களது உறவினா்கள் வாங்க மறுத்து புதன்கிழமை வாக்கு வாதத்தில் ஈடுட்டனா். பின்னா், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, உறவினா்கள் இருவரது உடல்களையும் பெற்று அவசர ஊா்தி மூலம் சொந்த கிராமத்துக்கு எடுத்துச் சென்றனா்.

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க

காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப... மேலும் பார்க்க