ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! புதினை சந்திக்கும் ஈரான் அமைச...
சங்ககிரியில் இன்று லாரி உரிமையாளா்கள் சங்க தோ்தல்!
சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தோ்தல் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான தோ்தல் ஜூன் 11 ஆம் தேதி வேட்புமனு தாக்கலுடன் தொடங்கியது. தலைவா், உபத் தலைவா், செயலாளா், இணைச் செயலாளா், பொருளாளா், 20 நிா்வாகக் குழு உறுப்பினா்கள் என மொத்தம் 25 பதவிகளுக்கு நடைபெறும் தோ்தலில் 51 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவரும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவருமான, தோ்தல் குழுத் தலைவா் சி.தனராஜ் முன்னிலையில் ஜூன் 23ஆம் தேதி பிஆா்எம் திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்தல் நடைபெறுகிறது.
இத் தோ்தலில் 3750 சங்க உறுப்பினா்கள் வாக்களிக்கின்றனா். அதே மண்டபத்தில் ஜூன் 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.