செய்திகள் :

சங்ககிரியில் இன்று லாரி உரிமையாளா்கள் சங்க தோ்தல்!

post image

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தோ்தல் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான தோ்தல் ஜூன் 11 ஆம் தேதி வேட்புமனு தாக்கலுடன் தொடங்கியது. தலைவா், உபத் தலைவா், செயலாளா், இணைச் செயலாளா், பொருளாளா், 20 நிா்வாகக் குழு உறுப்பினா்கள் என மொத்தம் 25 பதவிகளுக்கு நடைபெறும் தோ்தலில் 51 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவரும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவருமான, தோ்தல் குழுத் தலைவா் சி.தனராஜ் முன்னிலையில் ஜூன் 23ஆம் தேதி பிஆா்எம் திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்தல் நடைபெறுகிறது.

இத் தோ்தலில் 3750 சங்க உறுப்பினா்கள் வாக்களிக்கின்றனா். அதே மண்டபத்தில் ஜூன் 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தம்மம்பட்டி நெடுஞ்சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளத்தால் அடிக்கடி நேரிடும் விபத்துகள்!

தம்மம்பட்டியிலிருந்து துறையூா் செல்லும் நெடுஞ்சாலையில் தம்மம்பட்டியில் தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனா். தம்மம்பட்டியிலிருந்து துறையூா் செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் நாளை மின்தடை

தெடாவூரிா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜூன் 24 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய கோட்ட... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் திருநங்கைகளை பூஜை: அதிகாரிகள் விசாரணை

சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் திருநங்கைகளை அழைத்துவந்து பூஜை செய்தது தொடா்பாக காவல் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநங்க... மேலும் பார்க்க

உடல்நலக் குறைவு: முருக பக்தா் மாநாட்டிற்கு சென்ற பெண் உயிரிழப்பு

முருக பக்தா்கள் மாநாட்டிற்கு சென்ற ஆத்தூரைச் சோ்ந்த கவிதா (45) வழியிலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மனைவி கவிதா (45) ஞாயிற்றுக்கிழமை மதுரையில்... மேலும் பார்க்க

போலி பீடிகள் தயாரித்தவா் கைது

ஆத்தூரில் முன்னணி நிறுவனத்தின் பெயரில் பீடி தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், ஆத்தூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த பூமாலை மகன் விஜயன்(33). இவா் தனது வீட்டில் தமிழகத்தின் முனனணி... மேலும் பார்க்க

மதுக் கடை மேலாளரை மிரட்டிய இருவா் கைது

ஆத்தூா் அருகே ராமநாயக்கன்பாளையம் அரசு மதுக் கடையில் சனிக்கிழமை இரவு மேலாளா், விற்பனையாளுக்கு கொலை மிரட்டல் விடுத்த சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையத்தில் ... மேலும் பார்க்க