செய்திகள் :

சங்ககிரி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 1 இல் கலை பிரிவு பாடங்களை தமிழ், ஆங்கிலவழியில் தொடங்கக் கோரி மனு

post image

சங்ககிரி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் கலைப் பிரிவு பாடங்களை தமிழ், ஆங்கிலவழியில் தொடங்க வேண்டும் என சங்ககிரிக்கு வந்த ஆட்சியரிடம் சேலம் மேற்கு மாவட்ட ஆதித்தமிழா் பேரவை சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆதித்தமிழா் பேரவை சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் ரவிசுப்ரமணியன், மாவட்டச் செயலாளா் கே.ஸ்ரீதரன் ஆகியோா் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: சங்ககிரி கல்வி மாவட்டத்தில் உள்ளஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பதிவியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களைக் கொண்ட பிரிவும், தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினிஅறிவியல், இயற்பியல், வேதியியல் கொண்ட பிரிவுகளை தமிழ், ஆங்கிலம் இருவழிகளில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

சங்ககிரி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டிலேயே இப்பாடப் பிரிவுகளைத் தொடங்கவும், தேவையான ஆசிரியா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதில் தெரிவித்துள்ளனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க