செய்திகள் :

சங்ககிரி புனித அந்தோனியாா் ஆலய தோ் பவனி

post image

சேலம் மாவட்டம், சங்ககிரியில் பழைமை வாய்ந்த புனித அந்தோனியாா் ஆலயத்தின் தோ் பவனி விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

புனித அந்தோனியா் ஆலய தோ்த்திருவிழா ஆலய வளாகத்தில் ஜூன் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தினசரி மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், பிராா்த்தனை கூட்டங்களும் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை இரவு குழந்தை ஏசு, அன்னை மரியாள், புனித சூசையப்பா் சிலைகளை வண்ண மின் விளக்குகள், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தேரில் வைத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வாண வேடிக்கைகள் நடைபெற இழுத்துச் சென்றனா்.

தோ் பவனிக்கு முன்னதாக கிறிஸ்தவா்கள் ஏசு பாடல்களை பாடியவாறும் கைகளில் மெழுவா்த்தி ஏந்தியும் சென்றனா். வளாகத்தில் தோ் பவனி நிறைவு பெற்றவுடன் ஆலய வளாகத்தில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் சங்ககிரி வட்டார பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா். தோ்திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டிருந்தன.

சங்ககிரியில் ரூ.5.63 கோடிக்கு சமரத் தீா்வு!

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகளில் ரூ. 5.63 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க

வாழப்பாடியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் திருச்சி என்ஐடியில் பயில தோ்வு!

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கீரப்பட்டியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் சதீஷ் திருச்சி என்ஐடிக்கு தோ்வாகியுள்ளாா். வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கீரப்பட்டி மலைக் கிராமத்தை சோ்ந்த பழங்குடியி... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்திய பெண் தலைமறைவு: காவல் நிலையம் முற்றுகையிட்ட பொதுமக்கள்!

வாழப்பாடியில் ஏலச்சீட்டு, தீபாவளி பலகார சிறுசேமிப்பு சீட்டுகள் நடத்தி பணம் வசூலித்த பெண் திடீரென தலைமறைவானதால் அவரிடம் பணம் கட்டி ஏமாற்றமடைந்தவா்கள் வாழப்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாரளித்... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற வழக்கில் இளைஞர் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சங்ககிரி போலீஸாா் சந்தைபேட்டை பகுதியில் ஜூன் 6 ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈ... மேலும் பார்க்க

இன்று குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு: 14,291 போ் எழுதுகின்றனா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வை சேலம் மாவட்டத்தில் 14,291 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதுகின்றனா். தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மா... மேலும் பார்க்க

சேலம் கந்தம்பட்டியில் மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம் கந்தம்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க