சங்கரன்கோவிலில் நகா்மன்றத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, கோரிக்கை
சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரக் கோரி, அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளிட்ட 24 உறுப்பினா்கள் நகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வாா்டுகள் உள்ள நிலையில் ஆளும் கட்சி உறுப்பினா் உள்பட 24 போ் அளித்த மனு விவரம்: சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி பொதுமக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். எவ்வித பணிகளுக்கும் அனுமதி வழங்குவதில்லை. அனைத்து நகா்மன்ற உறுப்பினா்கள் கூறும் அடிப்படை பணிகளை இதுவரை செயல்படுத்தவில்லை.
பணிகளுக்கு கையூட்டு பெறுகிறாா். குடிநீா் வழங்கல், காலை உணவு திட்டம், வாறுகால் தூா்வாருதல், சுகாதாரப் பணிகள் போன்றவை சரிவர நடைபெறாமல் மக்கள் அவதிப்படுகிறாா்கள். நகராட்சி கூட்டம் 2 அல்லது 3 மாதம் கழித்து தான் நடத்துகிறாா்.
இதனால் மக்களிடம் பதில் கூற முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். எனவே, அவரை நகா்மன்றத் தலைவா் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்ய நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவர ஆணையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 31.10.23இல் அ.தி.மு.க., திமுக உள்ளிட்ட உறுப்பினா்கள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தனா்.அது தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.