செய்திகள் :

சசி தரூர் விளக்கத்தால் பாகிஸ்தானுக்கு கொலம்பியா தெரிவித்த இரங்கல் வாபஸ்

post image

பாகிஸ்தானுக்கு தெரிவித்த இரங்கல் அறிக்கையை கொலம்பியா திரும்பப் பெற்றது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் குழுக்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானில் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி, அந்நாட்டு கொலம்பியா இரங்கல் தெரிவித்தது.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் விளக்கமளிக்க கொலம்பியாவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு சென்றுள்ளது. கொலம்பியா கவுன்சில் உறுப்பினர்களுடன் அவர் பேசுகையில், அகிம்சை மூலம் அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்திய மகாத்மா காந்தியின் நாட்டைச் சேர்ந்தவர்கள். எங்களைப் பொறுத்தவரையில், சுயமரியாதையுடன்கூடிய அமைதிதான் வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. அதனை எதிர்கொள்வதையும் இந்தியா சரியாகச் செய்து வருகிறது.

பிரச்னைகளை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. ஆனால், நெற்றியில் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருக்கும்போது, பேச்சுவார்த்தை நடத்துவதில் நம்பிக்கையில்லை.

பயங்கரவாதத்தை தனது கொள்கையாக பாகிஸ்தானில், அவர்களே பயங்கரவாத முகாம்களை அழிக்கும்போது, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து யோசிக்கலாம்.

ஆனால், அதுவரையில் எந்தப் பேச்சுவார்த்தை கிடையாது. காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், காஷ்மீரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சசி தரூரின் உரையைக் கேட்ட கொலம்பியா, பாகிஸ்தானுக்கு தெரிவித்திருந்த இரங்கல் அறிக்கையையும் திரும்பப் பெற்றது. மேலும், புதிய அறிக்கையையும் கொலம்பியா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! முப்படை தலைமைத் தளபதி ஒப்புதல்?

உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.

சென்னை: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு!

ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தன... மேலும் பார்க்க

இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்: முப்படை தலைமைத் தளபதி!

ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

கன்னட மொழி விவகாரம்: கமல் கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

பெங்களூரு: கன்னட மொழி விவகாரம் குறித்து, கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு, நடிகரும், மநீம தலைவருமான கமல் எழுதிய கடிதம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில... மேலும் பார்க்க

மிசோரமில் 552 நிலச்சரிவுகள்! 152 வீடுகள் சேதம், 5 பேர் பலி!

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்து வரும் அதிக கனமழையால், அங்குள்ள மக்களின் இயல்பு... மேலும் பார்க்க