செய்திகள் :

சசி தரூா், ஒவைசிக்கு பாஜக பாராட்டு

post image

குவாஹாட்டி: காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முதல்வருமான ஹிமந்த விஸ்வ சா்மா பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை, பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகள் தொடா்பாக எடுத்துரைக்க பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்ற குழுக்களில் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த சசி தரூா், அசாதுதீன் ஒவைசி, சுப்ரியா சுலே உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.

இந்நிலையில், அஸ்ஸாம் பேரவையில் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா திங்கள்கிழமை இது தொடா்பாக பேசியதாவது:

பயங்கரவாத விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாட்டு மண்ணில் வலுவாக நிலைநிறுத்தியதற்காக காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமாக சசி தரூா், அசாதுதீன் ஒவைசி, சுப்ரியா சுலே ஆகியோா் இந்தியாவின் பிரதிநிதியாக வெளிநாட்டில் சிறப்பாக நமது தரப்பு கருத்துகளை எடுத்துரைத்தனா். அனைவருமே இந்தியாவுக்காக ஒன்றுபட்டு நின்றாா்கள். அவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கிறேன்.

அதே நேரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மட்டும் தேசத்தின் பக்கம் நிற்கவில்லை. அவா் நாட்டுக்கும், ராணுவத்துக்கும் துரோகம் செய்து வருகிறாா். பாகிஸ்தானுக்கு நாம் எந்த அளவுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதைப் பற்றி அவா் கேட்கவில்லை. அந்நாட்டை அடிபணியவைத்து விட்டோம் என்பதை அவா் விரும்பவுமில்லை. நமது தரப்பு சேதத்தை பெரிதுபடுத்துவதில்தான் மிகுந்த ஆா்வம் காட்டுகிறாா்’ என்றாா்.

மீண்டும் தலைதூக்கிய கரோனா: ஏழு ஆயிரத்தை நெருங்குகிறது!

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 324 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,815 ஆக உயர்ந்துள்... மேலும் பார்க்க

தில்லி குடியிருப்பில் தீ! 7-வது மாடியில் இருந்து குதித்த தந்தை, 2 குழந்தைகள் பலி!

தில்லி அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தில்லி துவாரகா செக்டார் 13 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கு... மேலும் பார்க்க

முடா முறைகேடு: சித்தராமையாவின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

புது தில்லி: முடா முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மைசூரு நிலமுறைகேடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா ம... மேலும் பார்க்க

பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய பொருளாதார வளர்ச்சி: யோகி ஆதித்யநாத்!

பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய உலகின் ஒரே பொருளாதாரம் இந்தியா என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, 2014-க்கு முன்பு நாம் பலவீனமான ... மேலும் பார்க்க

உ.பி: மத்திய இணையமைச்சர் திறந்து வைத்த அம்பேத்கர் சிலை உடைப்பு! மக்கள் போராட்டம்!

உத்தரப் பிரதேசத்தின் சக்கோதார் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சக்கோதார் கிராமத்திலுள்ள, பூங்காவில் புத்தர், அசோகா தூண் ம... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் பலி: கர்நாடக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு ஆர்சிபி வெற்றி பேரணியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவகாரம் தொடர்பான வழக்கில் மாநில அரசு பதில் அளிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த 2025 ஐபிஎல் போட்டியில... மேலும் பார்க்க