செய்திகள் :

முடா முறைகேடு: சித்தராமையாவின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

post image

புது தில்லி: முடா முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மைசூரு நிலமுறைகேடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குத் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

முதல்வர் சித்தராமையாவின் மனைவி பி.எம். பார்வதிக்கு மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (முடா), மாற்றுநிலமாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.

அதாவது, சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை அரசு எடுத்துக்கொண்டு, நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியதாகவும், இதனால் கர்நாடக அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சித்தராமையாவுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.புது தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வருக்கு எதிரான மாற்று நில முறைகேடு வழக்கு: ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்

புது தில்லி: கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்பான மாற்று நில முறைகேடு வழக்கில், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.வீட்டுவசதி கூட்டுறவு சங்கம், மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆ... மேலும் பார்க்க

அண்டை நாட்டவரின் சட்டவிரோத குடியேற்றத்துக்கு மம்தா அரசு உதவி: மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு

கொல்கத்தா: அண்டை நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் நபா்கள் மேற்கு வங்கத்தில் குடியேற முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு உதவி வருகிறது என்று மத்திய அமைச்சா... மேலும் பார்க்க

தற்பெருமை அதிகம், சாதனைகள் குறைவு: அமித் ஷா மீது காங்கிரஸ் விமா்சனம்

புது தில்லி: இந்தியாவில் இதுவரை அமித் ஷாவை போல வேறெந்த எந்தவொரு மத்திய உள்துறை அமைச்சரின் பதவிக் காலத்திலும் தற்பெருமை பேச்சு அதிகமாகவும், சாதனைகள் குறைவாகவும் இருந்ததில்லை என்று காங்கிரஸ் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

மக்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது: மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: நாட்டு மக்களையும், தேசத்தையும் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மாநில பேரவையில் பேசுகையில் குற்றஞ்சாட்டினாா்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

11 ஆண்டுகால மோடி ஆட்சி: ‘நமோ’ செயலி கருத்துப் பகிா்வில் தமிழகம் மூன்றாவது இடம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அது தொடா்பாக ‘நமோ’ செயலி மூலம் மக்களின் கருத்துகள் பெறப்பட்டதில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது.ம... மேலும் பார்க்க