செய்திகள் :

இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்படும் கிரெட்டா தன்பெர்க்!

post image

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் தற்போது தீவிரமடைந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் பகுதியளவே அனுமதிக்கப்படுவதால் அங்குள்ள மக்கள் பசியால் செத்துக் கொண்டிருக்கின்றனர். ஐ.நா. அமைப்புகள் இதுகுறித்து கவலை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பா்க், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான பாலஸ்தீன வம்சாவளியைச் சோ்ந்த பிரான்ஸ் பிரதிநிதி ரிமா ஹாசன் உள்பட 12 தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை ஃப்ரீடம் ஃப்ளோடிலா கூட்டமைப்பு, நிவாரணப் பொருள்களுடன் காஸாவுக்கு அனுப்பி வைத்தது.

இதையும் படிக்க |உணவுகூட வேண்டாம், நாப்கின் தேவை: காஸாவில் பெண்கள், சிறுமிகளின் அவல நிலை!

சிசிலியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன் புறப்பட்ட ‘மாட்லீன்’ என்ற இந்தக் கப்பல், நேற்று காஸாவில் இருந்து 200 கிமீ தொலைவில் இஸ்ரேல் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டது. அதில் பயணித்த சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரெட்டா தன்பா்க் உள்ளிட்ட 12 தன்னாா்வலா்களை இஸ்ரேல் ராணுவத்தினர் கைது செய்தனா். அந்தக் கப்பலில் குழந்தைகளுக்கான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் விளம்பர நடவடிக்கை என்று இஸ்ரேல் விமரிசித்துள்ளது. தங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்ட நிவாரணங்கள் மட்டுமே காஸாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

கிரெட்டா தன்பா்க் உள்பட தன்னாா்வலா்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று இஸ்ரேல் அரசு கூறிய நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கிரெட்டா தன்பா்க், இஸ்ரேலில் இருந்து பிரான்ஸ் வழியாக ஸ்வீடனுக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கிரெட்டா தன்பா்க் உள்பட 3 தன்னார்வலர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர், இஸ்ரேலை விட்டு புறப்படுவதற்கு சம்மதம் தெரிவித்ததால் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் மற்றவர்களிடம் இஸ்ரேல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 'பட்டினிதான் மிகப்பெரிய நோய்' - காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண்!

வலுக்கும் போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் இரவு நேர ஊரடங்கு!

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பட்டுள்ள வன்முறை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகள... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ்: ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய முகமுடி கொள்ளையர்கள்!

லாஸ் ஏஞ்சலீஸ் வன்முறையைப் பயன்படுத்தி முகமூடியுடன் ஆப்பிள் மொபைல் கடையை சூறையாடிய கொள்ளையர்களால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக... மேலும் பார்க்க

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

‘ஆக்ஸிம்-4’ மிஷனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவ... மேலும் பார்க்க

யேமனில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாகத் தாக்குதல்

துபை: யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக நகரான ஹூதைதாவில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாக செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது.தங்களின் அல்-மசீரா தொலைக்காட்சி மூலம் ஹூதி கிளர்ச்சியா... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மீண்டும் தீவிர தாக்குதல்

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் தெற்கு துறைமுக நகரமான ஒடெஸா மீது ரஷியா செவ்வாய்க்கிழமை அதிகாலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தீவிர தாக்குதல் நடத்தியது. இதில் மூவர் உயிரிழந்தனர்; 13 பேர் காயம... மேலும் பார்க்க

ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் உயிரிழப்பு

கிராஸ் (ஆஸ்திரியா): ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிராஸில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர் ப... மேலும் பார்க்க