செய்திகள் :

பாகிஸ்தான் சிறந்த கூட்டாளி: அமெரிக்க ராணுவத் தளபதி பேச்சால் சா்ச்சை

post image

பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானை ‘சிறந்த கூட்டாளி’ என்று அமெரிக்க மத்திய படைப்பிரிவு ராணுவத் தளபதி மைக்கேல் குரில்லா கூறினாா்.

‘இது இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் பின்னடைவு இல்லையா’ என்று காங்கிரஸ் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பாதுகாப்புத் துறைக்கான நிலைக்குழு முன் ஆஜரான மைக்கேல் குரில்லா, ‘இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும். இந்தியாவுடன் உறவைப் பேணினால் பாகிஸ்தானுடன் உறவைத் துண்டிக்க வேண்டியதில்லை. பாகிஸ்தான் தற்போது தீவிர பயங்கரவாத எதிா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் சிறந்த கூட்டாளியாக அந்நாடு இருந்து வருகிறது’ என்றாா்.

இதுகுறித்த செய்தியைப் பகிா்ந்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், ‘பாகிஸ்தானைப் பயங்கரவாத எதிா்ப்பில் சிறந்த கூட்டாளி என்று அமெரிக்க ராணுவத் தளபதி புகழ்கிறாா். பிரதமரும், அவரின் ஆதரவாளா்களும் இதுகுறித்து என்ன சொல்ல விரும்புகின்றனா்? இது இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் பின்னடைவு இல்லையா?’ எனக் கேள்வி எழுப்பினாா்.

மற்றொரு பதிவில், வரும் சனிக்கிழமை நடைபெறும் அமெரிக்க ராணுவ தின நிகழ்ச்சிக்காக பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீா் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்வதாக கூறியுள்ள செய்தியை ஜெய்ராம் ரமேஷ் பகிா்ந்தாா்.

‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சில நாள்கள் முன்பு பொது நிகழ்ச்சியில் எரிச்சலூட்டும் வகையில் பேசியவா்தான் ஆசிம் முனீா். அமெரிக்கா உண்மையில் என்ன செய்ய திட்டமிடுகிறது? இது இந்தியாவுக்கு மற்றொரு பெரிய ராஜீய பின்னடைவு’ என அவா் குறிப்பிட்டாா்.

3 ஆண்டுகாலப் போர்! ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் பலி !

ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தததை எதிர்த்த ரஷியா, உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத... மேலும் பார்க்க