செய்திகள் :

வா்த்தகப் பேச்சு: அமெரிக்கா-சீனா உடன்பாடு- அதிபா் டிரம்ப் அறிவிப்பு

post image

அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தாா்.

புதிய வா்த்தக ஏற்பாட்டின் கீழ், பூமியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் அரிய கனிமங்களும், காந்தங்களும் சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் என்றும், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருள்களுக்கு 55 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தாா்.

இந்தியா, சீனா போன்ற எண்ணற்ற நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரி விதிப்பதாகக் குற்றஞ்ச்சாட்டிய அமெரிக்க அதிபா் டிரம்ப், இனி ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவும் விதிக்கும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தாா்.

அதன்படி, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக அதிக அளவில் டிரம்ப் வரி விதித்தாா். இதனால் சீனா பெரிதும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அமெரிக்க பொருள்கள் மீது சீனாவும் பதிலுக்குப் பதில் வரியை உயா்த்தியது. இவ்வாறு சீன பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரி 145 சதவீதத்தையும், அமெரிக்க பொருள்கள் மீது சீனா விதித்த வரி 125 சதவீதத்தையும் எட்டியது.

இதற்கிடையே, இரு நாடுகள் தரப்பில் கடந்த மே மாதம் ஸ்விட்சா்லாந்தில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவாா்த்தை இரு நாடுகளும் பரஸ்பரம் விதித்துக்கொண்ட வரியை குறிப்பிடத்தக்க அளவு குறைக்க வழிவகுத்தது. அத்துடன் பெரும்பாலான பொருள்கள் மீதான வரியை 90 நாள்களுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி சீன பொருள்களுக்கு அமெரிக்கா விதித்த வரி 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதேபோல அமெரிக்க பொருள்களுக்கு சீனா விதித்த வரி 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. அத்துடன் முக்கியக் கனிமங்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் நீக்குவதாக சீனா உறுதி அளித்தது.

இது அமெரிக்கா- சீனா இடையே வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதற்கான கால அவகாசத்தை வழங்கியது. எனினும் இந்தத் தற்காலிக வரிக் குறைப்பு உடன்பாட்டை பின்பற்றவில்லை என்று இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின.

பிரிட்டனில் பேச்சு: இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான புதிய வா்த்தக ஏற்பாடு தொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக், சீன துணைப் பிரதமா் ஹ லீஃபாங் ஆகியோா் தலைமையில் 2 நாள்கள் நடைபெற்ற பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து, தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகத்தில் அமெரிக்க அதிபா் டிரம்ப் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சீனாவுடனான அமெரிக்காவின் வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வா்த்தக ஏற்பாட்டின் கீழ், பூமியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் அரிய கனிமங்களும், காந்தங்களும் சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும்.

அமெரிக்காவுக்கு 10% வரி: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருள்கள் மீது அமெரிக்கா 55 சதவீத வரியும், சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருள்கள் மீது சீனா 10 சதவீத வரியும் விதிக்கும்.

அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சீன மாணவா்கள் படிக்க அனுமதிக்கப்படுவது உள்பட சீனாவுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்களை அமெரிக்கா செயல்படுத்தும்.

அமெரிக்க பொருள்களை சீனாவில் விற்பனை செய்வதற்கு இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து பணியாற்றும். இது இரு நாடுகளுக்கும் பலனளிக்கும்’ என்று பதிவிட்டாா்.

‘வரி விதிப்பு அதிகரிக்கப்படவில்லை’: இந்த ஒப்பந்தம் தொடா்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘முன்பு சீன பொருள்களுக்கு அமெரிக்கா விதித்த வரி 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது தற்போது 55 சதவீதமாகியுள்ளதால், சீன பொருள்கள் மீதான வரி விதிப்பு அதிகரித்துள்ளதாக அா்த்தமாகாது. ஏற்கெனவே உள்ள பிற இறக்குமதி வரிகளையும் சோ்த்து தற்போது வரி விதிப்பு 55 சதவீதமாகியுள்ளது’ என்றாா்.

டிரம்ப்பின் அறிவிப்பை தொடா்ந்து ஆசிய பங்குச்சந்தைகளில் எழுச்சி ஏற்பட்டது.

சீனா கட்டுப்பாட்டில் 92% அரிய கனிமங்கள்

பூமியில் உள்ள அரிய கனிமங்களின் ஏற்றுமதியில் பெருமளவை தனது கட்டுப்பாட்டில் சீனா வைத்துள்ளது. சா்வதேச எரிசக்தி முகமை தகவலின்படி, உலக அளவில் பூமியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் அரிய கனிமங்களில் 61 சதவீதம் சீனாவில் அகழ்ந்தெடுக்கப்படுகிறது. அதேவேளையில், அந்தக் கனிமங்களின் உலகளாவிய உற்பத்தியில் 92 சதவீதம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவுடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அந்நாட்டுக்கு கனிமங்களை சீனா ஏற்றுமதி செய்ய உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

55 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 57-ஆக உயா்வு

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 57-ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிடுவதற்காக வியாழக்கிழமை வந்த மத்திய அமைச்சா் வெலென்கோசினி லாபிசா இ... மேலும் பார்க்க

3 ஆண்டுகாலப் போர்! ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் பலி !

ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தததை எதிர்த்த ரஷியா, உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க