செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு ஏன்? - மா. சுப்பிரமணியன் விளக்கம்

post image

அனைத்துப் பிரிவினருக்கும் மருத்துவ வசதியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுவதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

அனைத்துத் தரப்பினருக்கும் மருத்துவ வசதி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கட்டண சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுகிறது. மருந்து மாத்திரைகள் அனைவருக்கும் ஒன்றுதான்.

பொதுவார்டில் இருக்க விரும்பாதவர்களுக்கு, அவர்களின் தனியுரிமை வசதிக்காக கட்டணம் பெறப்பட்டு அறை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 29,771 மருத்துவப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்ஸி, எம்ஆர்பி, என்எச்எம் மற்றும் மாவட்ட மருத்துவச் சங்கம் ஆகியவற்றின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

43,155 மருத்துவப் பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடுத்த 2026ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் காலிப்பணியிடங்களுக்கும் சேர்த்தே 2,642 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பொருத்தவரை இப்போது மருத்துவர்கள் எண்ணிக்கை கூடுதலாகத்தான் இருக்கின்றனர்.

பணி நியமன ஆணைகளைப் பெற்றும் 3 மாதங்களுக்குள் பணியில் சேராதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் வராதபட்சத்தில் எம்ஆர்பி தேர்வில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் வந்தோருக்கு பணி ஆணைகள் வழங்கப்படும்.

கரோனாவைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்ட 19 மாதிரிகளின் படி வீரியம் குறைந்த ஒமைக்ரான் வகையைச் சேர்ந்தது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை.

இணை நோய்கள் இருப்போர், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தோர், கருவுற்ற பெண்கள், முதியோர் மட்டும் முகக்கவசம் அணியலாம். கட்டாயமல்ல.

இதுவரை நாடு முழுவதுமே கரோனா தொற்றால் இறப்பு இல்லை. பல மடங்கு வேகமாகப் பரவும் கேரளத்திலும் கரோனா இறப்புகள் இல்லை.

தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகள் அதிகரிப்பு மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சேவையால் அரசு மருத்துமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது என்றார் மா. சுப்பிரமணியன்.

ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனத்துக்கு கட்டணம்: இபிஎஸ் கண்டனம்

சென்னை: ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் விதிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்... மேலும் பார்க்க

மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது: அமைச்சா் தங்கம் தென்னரசு

சென்னை: மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது என்று தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளாா். கீழடி அகழாய்வு குறித்து மத்திய அமைச்சா் ஷெகாவத் கருத்துக்கு, ‘எக்ஸ்... மேலும் பார்க்க

ஜூன் 30-இல் முப்படை ஓய்வூதியா்களுக்கான குறைகேட்பு முகாம்: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

சென்னை: திருச்சியில் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள முப்படைகளில் பணியாற்றிய ஓய்வூதியா்களுக்கான குறைகேட்பு முகாமை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறாா்.சென்னை தேனாம்பேட்டையில... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள்: திமுகவுக்கு பெ.சண்முகம் வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க... மேலும் பார்க்க

சென்னையில் பலத்த மழை! 19 மாவட்டங்களில் இரவு வரை நீடிக்கும்...

சென்னை: சென்னையிலும் 18 மாவட்டங்களிலும் இரவு வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திருவள்ளூர்காஞ்சிபுரம்செங்கல்பட்டுதிருவண்ணாமலைராணிப்பேட்டைவிழுப்புரம்கள்ளக்குறிச்சிசிவகங்கைராமநாத... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து 12ஆம் தேதி தமிழக முதல்வர் தண்ணீர் திறந்துவைக்கவிருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர், நேரில் பார்வையிட்டார். ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ... மேலும் பார்க்க