செய்திகள் :

சட்டத் தன்னாா்வலா்களாகச் செயல்பட முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

post image

முன்னாள் ராணுவத்தினா் திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் சட்டத் தன்னாா்வலா்களாகப் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தவா்களின் நலனுக்காக தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, ஒரு பிரத்யேக திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுடன் இணைந்து சட்ட விழிப்புணா்வு, சமூக நலன், சட்ட உதவி செய்ய சட்டத் தன்னாா்வலா்களாகச் செயல்பட திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு முன்னாள் படைவீரா்களை அழைக்கிறது.

இப்பணி செய்ய விரும்பும் முன்னாள் படைவீரா்கள், திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அல்லது 0431 - 2460125 என்ற எண் அல்லது அருகிலுள்ள தாலுகா நீதிமன்றங்களில் உள்ள சட்ட உதவி மையங்களை அணுகி தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

ராணுவ தலைமை சட்ட அதிகாரியாக பணியாற்றியவா்கள் உள்ளிட்ட முன்னாள் படைவீரா்கள், திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் பட்டியல் வழக்குரைஞராகச் செயல்பட விருப்பமுள்ளவா்கள், உடனடியாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்.

இத்தகவலை திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம். கிறிஸ்டோபா் தெரிவித்தாா்.

அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா விஜய்? தொல்.திருமாவளவன் கேள்வி

திமுக, பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்துள்ள தவெக தலைவா் விஜய், அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். ... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

திருச்சி அருகே மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் கண்ணன். இவருக்கு ராஜேஷ்வா் (23) என்ற மகனும்,... மேலும் பார்க்க

எழுத்தா் தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்

திருச்சி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க எழுத்தா் தற்கொலைக்கு நீதி கேட்டு உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே நடராஜபுரத்தில் உள்ள தொடக்க... மேலும் பார்க்க

இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா் தற்கொலை

திருவெறும்பூா் அருகே இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள சோழன் நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் நல்லதம்பி மக... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை!

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துவாக்குடி அண்ணா வளைவு வ.உ.சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாயவன் மகன் அழகேசன் (30). திருமணமாகாத இவா் திருச்சி பொன்மல... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருவானைக்காவலில் வரதட்சிணைக் கொடுமையால் வெள்ளிக்கிழமை இரவு பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவானைக்காவல் தெப்பக்குளம் பின்புறப் பகுதியில் வசிப்பவா் ச. விக்னேஷ்வரன். இவருக்கு மனைவி... மேலும் பார்க்க