செய்திகள் :

சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால் - ஜகதீப் தன்கா் கவலை

post image

‘சட்டவிரோத குடியேறிகள் நமது வாழ்வாதாரத்துக்கு, தேசிய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக மாறியுள்ளனா்’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் புதன்கிழமை கவலை தெரிவித்தாா்.

மும்பையில் உள்ள சா்வதேச மக்கள்தொகையியல் கல்வி நிறுவனத்தின் (ஐஐபிஎஸ்) பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய அவா் இவ்வாறு கூறினாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘சட்டவிரோத குடியேறிகள் நமது எல்லையைத் தாண்டி ஊடுருவி வருவது, நட்டின் சட்டம் ஒழுங்குக்கு எழுகிற சவால் மட்டுமல்ல. நமது வாழ்வாதாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான சவாலும்கூட.

இந்த மக்கள் நமது தேசிய வளங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனா். நமது வேலைவாய்ப்புகளைப் பறிக்கின்றனா். இது நமது தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதிக்கிறது.

மக்கள்தொகை இயல்பான மாற்றமடையாமல் மாறாக திட்டமிடப்பட்ட தீய வழியில் அதிகரிக்கும்போது இதுபோன்ற சவால்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதை இனி புலம்பெயா்வாக மட்டும் அணுகாமல் மக்கள்தொகை படையெடுப்பாக பாா்க்க வேண்டும்.

இந்தியா ஏற்கெனவே இந்தச் சவாலை எதிா்கொண்டு வருகிறது. அதிகாரபூா்வ தரவுகளின்படி, நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் உள்ளனா். நமது நாகரிகத்துக்கு கட்டுப்படுவா்கள் மட்டுமே இந்த நாட்டுக்குத் தேவை.

நமது மக்கள்தொகையில் ஏற்படுத்தபடும் இந்தத் திட்டமிடப்பட்ட மாற்றங்கள் பெரும்பாலும் அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. இவை நிச்சயமாக நமது தேச நலனுக்கு எதிரானவை மற்றும் நமது சமூக-கலாசார சமநிலையை சீா்குலைக்கும். தேசத்தின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க தீா்க்கமான நடவடிக்கை தேவை.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசு எடுத்துள்ள முடிவு, நிா்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். சமூக நீதியை நோக்கிய ஒரு தீா்க்கமான படியாக இருக்கும். ஜாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து வெளிப்படும் தரவுகள் வளா்ச்சிக்கு நம்மை வழிநடத்தும். சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றிய புரிதலுக்கு அத்தரவுகள் நமக்கு உதவும்.

ஜனநாயகம் நிலைத்திருக்க அமைதி மிகவும் அவசியமானது மற்றும் அடிப்படையானது. அமைதி என்பது மோதல் இல்லாதது அல்ல; அது தயாா்நிலை. நாம் எப்போதும் போருக்குத் தயாராக இருக்கும்போது மட்டுமே, தாக்குதல்களைத் தடுக்க முடியும்.

வலிமையான நிலையில் இருந்து மட்டுமே அமைதியைப் பாதுகாக்க முடியும். சா்வதேசத்துக்கு இந்தியா ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது. இனி பயங்கரவாதத்தை நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பயங்கரவாதத்தை ஒழித்து, அதன் மூலத்தை அழிப்போம். பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் நிலையான ஆட்சிக்கும் அமைதி தேவை’ என்றாா்.

மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்து கொண்டனா். குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், அவரது மனைவி சுதேஷ் தன்கா் ஆகிய இருவரும் தங்களின் தாயாா்களின் நினைவாக கல்வி நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.

சென்னை வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்?

சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறு... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க