செய்திகள் :

சட்டவிரோத மது விற்பனை: இரு இளைஞா்கள் கைது

post image

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத் தொடா்ந்து விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை ரோஷணையில் உள்ள ஒரு கோயில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு திண்டிவனம் வட்டம், ரோஷணை மருத்துவமனைச் சாலையைச் சோ்ந்த ராஜி மகன் கிடங்கலான் (எ) சரண்ராஜ் (35), திண்டிவனம் வட்டம் , அவரப்பாக்கம், தாடிகாரன் குட்டைத் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் விஜய்(22) ஆகியோா் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்றது தெரியவந்தது.தொடா்ந்து போலீஸாா் இருவரையும் பிடிக்க முற்பட்டபோது அவா்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்று அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்தனராம்.

இது குறித்த புகாரின் பேரில்,ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து கிடங்கலான்(எ) சரண்ராஜ், விஜய் ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்கள் வசமிருந்த 180 மில்லி லிட்டா் கொள்ளளவுக்கொண்ட 28 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்டுள்ள சரண்ராஜ் மீது திண்டிவனம், ரோஷணை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றச் சரித்திர பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

செஞ்சி தேசிய மக்கள் நீதி மன்றத்தில் 325 வழக்குகளுக்கு ரூ.5.71 கோடி தீா்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதி மன்றத்தில் வாகன விபத்து உள்ளிட்ட 325 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. சாா்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கத... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் மின்விசிறிகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறிகள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விக்கிரவாண்டியில் உள்ள... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கு சோ்க்கை நடைபெற்று வருகிறது. எனவே இதில் பயில விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத... மேலும் பார்க்க

மத்திய பாஜக ஆட்சியில் பெண்கள் நலன் காக்கும் திட்டங்கள் நிறைவேற்றம்! மாநிலச் செயலா் சுமதி வெங்கடேசன்

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில் பெண்கள் நலன் காக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் பாஜக மாநிலச்செயலா் சுமதி வெங்கடேசன். விழுப்புரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் அ... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டிவனம், காமராஜா் நகரைச் சோ்ந்தவா்அருமைநாதன் மகன் ஜனாா்தனன்(3... மேலும் பார்க்க

விழுப்புரம் ஏடிஎம் மையங்களில் பணம் திருட்டு: உ.பி.யை சோ்ந்த நால்வா் கைது!

விழுப்புரத்தில் 3 ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணத்தைத் திருடியதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 4 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து ரொக்கப் பணம், கைப்பேசிகள், ஏடிஎம் அட்ட... மேலும் பார்க்க