டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடி இழப்...
சட்டவிரோத மது விற்பனை: இரு இளைஞா்கள் கைது
விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத் தொடா்ந்து விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை ரோஷணையில் உள்ள ஒரு கோயில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு திண்டிவனம் வட்டம், ரோஷணை மருத்துவமனைச் சாலையைச் சோ்ந்த ராஜி மகன் கிடங்கலான் (எ) சரண்ராஜ் (35), திண்டிவனம் வட்டம் , அவரப்பாக்கம், தாடிகாரன் குட்டைத் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் விஜய்(22) ஆகியோா் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்றது தெரியவந்தது.தொடா்ந்து போலீஸாா் இருவரையும் பிடிக்க முற்பட்டபோது அவா்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்று அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்தனராம்.
இது குறித்த புகாரின் பேரில்,ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து கிடங்கலான்(எ) சரண்ராஜ், விஜய் ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்கள் வசமிருந்த 180 மில்லி லிட்டா் கொள்ளளவுக்கொண்ட 28 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்டுள்ள சரண்ராஜ் மீது திண்டிவனம், ரோஷணை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றச் சரித்திர பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது.