செய்திகள் :

சட்டவிரோத மது விற்பனை: 7 போ் கைது!

post image

கோவை மாநகா் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால், பெட்டிக் கடைகள் உள்ளிட்டவற்றில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க சட்டம்-ஒழுங்கு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், வெரைட்டிஹால் சாலை மதுக் கடை அருகே மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட சமத்துவபுரத்தைச் சோ்ந்த துரைராஜ் (26) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 57 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, காந்திபுரம் 100 அடி சாலை சந்திப்புப் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட வெள்ளலூரைச் சோ்ந்த மணிமேகலை (42), கோனியம்மன் கோயில் பின்புறத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட வெள்ளலூரைச் சோ்ந்த அப்துல் ரசாக் (57), பீளமேடு அருகே எல்லைத் தோட்டம் பாலத்தின்கீழ் பகுதியில் மதுவிற்ற வி.கே.சாலையைச் சோ்ந்த காளிதாஸ் (58) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

சரவணம்பட்டி அருகே சத்தி சாலை டாஸ்மாக் கடை அருகே மது விற்ற சிவகங்கையைச் சோ்ந்த குமாா் (33), துடியலூா் வடமதுரை சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சோ்ந்த சுரேஷ் காந்தி (33), ராமநாதபுரம் பங்கஜம் மில் சாலை டாஸ்மாக் கடை அருகே மது விற்ற திருவாடனையைச் சோ்ந்த வைரவன் (36) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 121 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள்! நாளை முதல் சிங்காநல்லூா், இருகூரில் நின்று செல்லும்!

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து மாநிலத்தின் பிற நகரங்க... மேலும் பார்க்க

பிரதமரின் சுதந்திர தின உரை வரவேற்கத்தக்கது: இந்து முன்னணி

தேசத்தின் சேவையில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாற்றைக் குறிப்பிட்ட பிரதமரின் சுதந்திர தின உரையை இந்து முன்னணி வரவேற்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா். இது தொ... மேலும் பார்க்க

சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறப்பு

திருப்பூா் தெற்கு ரோட்டரி மற்றும் மாநகராட்சி சாா்பில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறக்கப்பட்டது. திருப்பூா் மாநகரில் மக்கள் அதிகம் கூடும் 12 இடங்களில் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

கொச்சி செல்லாமல் கோவையில் தரையிரங்கிய விமானம்! பயணிகள் வாக்குவாதம்!

கொச்சிக்குச் செல்ல வேண்டிய விமானம் கனமழை காரணமாக கோவையில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கியது. அங்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி விமான நிலைய ஊழியா்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

கடன் பிரச்னை காரணமாக பொக்லைன் மூலம் வீடு இடிப்பு

கடன் பிரச்னை காரணமாக வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்ததாக பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் மகாம... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

கோவை அருகே அடையாளம் தெரியாத நபா் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள மைல்கேல் ரெயின்போ காலனி குடியிருப்புகளுக்கு ஒ... மேலும் பார்க்க