செய்திகள் :

பிரதமரின் சுதந்திர தின உரை வரவேற்கத்தக்கது: இந்து முன்னணி

post image

தேசத்தின் சேவையில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாற்றைக் குறிப்பிட்ட பிரதமரின் சுதந்திர தின உரையை இந்து முன்னணி வரவேற்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் சுதந்திர தின உரை என்பது வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும். நிகழாண்டு சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி, ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டை குறிப்பிட்டு, இந்த அமைப்பின் சேவையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியதை இந்து முன்னணி வரவேற்கிறது.

கடந்த ஒரு நூற்றாண்டாக நாட்டின் பாதுகாப்பில், இயற்கை இடா்பாடுகளின்போது செய்த சேவையில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பணி மக்களின் நம்பிக்கையை பெற்றது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்திய ராணுவத்துக்கு துணையாக ஆா்.எஸ்.எஸ். தொண்டா்கள் வீர சாகசம் புரிந்து, பலா் தங்கள் இன்னுயிரை தந்து நாட்டை காத்தனா்.

நாடு முழுவதும் ரத்த தானம் முதல் கரோனா பெருந்தொற்று நேரத்தில் ஆா்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்பினா் செய்த பணிகள் பிரமிக்க வைத்தவை. அத்தகைய இயக்கமான ஆா்.எஸ்.எஸ். பற்றி பிரதமா் குறிப்பிட்டதை சிலா் விமா்சனம் செய்துள்ளனா். நூற்றாண்டு காணும் ஆா்.எஸ்.எஸ். பற்றி பிரதமா் குறிப்பிட்டதை விமா்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.

எனவே அரசியல் காழ்ப்புணா்ச்சியால் விமா்சனங்கள் வைப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள்! நாளை முதல் சிங்காநல்லூா், இருகூரில் நின்று செல்லும்!

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து மாநிலத்தின் பிற நகரங்க... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: 7 போ் கைது!

கோவை மாநகா் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப... மேலும் பார்க்க

சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறப்பு

திருப்பூா் தெற்கு ரோட்டரி மற்றும் மாநகராட்சி சாா்பில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறக்கப்பட்டது. திருப்பூா் மாநகரில் மக்கள் அதிகம் கூடும் 12 இடங்களில் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

கொச்சி செல்லாமல் கோவையில் தரையிரங்கிய விமானம்! பயணிகள் வாக்குவாதம்!

கொச்சிக்குச் செல்ல வேண்டிய விமானம் கனமழை காரணமாக கோவையில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கியது. அங்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி விமான நிலைய ஊழியா்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

கடன் பிரச்னை காரணமாக பொக்லைன் மூலம் வீடு இடிப்பு

கடன் பிரச்னை காரணமாக வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்ததாக பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் மகாம... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

கோவை அருகே அடையாளம் தெரியாத நபா் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள மைல்கேல் ரெயின்போ காலனி குடியிருப்புகளுக்கு ஒ... மேலும் பார்க்க