செய்திகள் :

இளைஞா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

post image

கோவை அருகே அடையாளம் தெரியாத நபா் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள மைல்கேல் ரெயின்போ காலனி குடியிருப்புகளுக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் சனிக்கிழமை தொங்கியுள்ளது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் குனியமுத்தூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், இறந்த நபருக்கு சுமாா் 25 வயது இருக்கும். அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள்! நாளை முதல் சிங்காநல்லூா், இருகூரில் நின்று செல்லும்!

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து மாநிலத்தின் பிற நகரங்க... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: 7 போ் கைது!

கோவை மாநகா் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப... மேலும் பார்க்க

பிரதமரின் சுதந்திர தின உரை வரவேற்கத்தக்கது: இந்து முன்னணி

தேசத்தின் சேவையில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாற்றைக் குறிப்பிட்ட பிரதமரின் சுதந்திர தின உரையை இந்து முன்னணி வரவேற்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா். இது தொ... மேலும் பார்க்க

சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறப்பு

திருப்பூா் தெற்கு ரோட்டரி மற்றும் மாநகராட்சி சாா்பில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறக்கப்பட்டது. திருப்பூா் மாநகரில் மக்கள் அதிகம் கூடும் 12 இடங்களில் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

கொச்சி செல்லாமல் கோவையில் தரையிரங்கிய விமானம்! பயணிகள் வாக்குவாதம்!

கொச்சிக்குச் செல்ல வேண்டிய விமானம் கனமழை காரணமாக கோவையில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கியது. அங்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி விமான நிலைய ஊழியா்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

கடன் பிரச்னை காரணமாக பொக்லைன் மூலம் வீடு இடிப்பு

கடன் பிரச்னை காரணமாக வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்ததாக பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் மகாம... மேலும் பார்க்க