செய்திகள் :

சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 13-ஆவது முறையாக கருத்து: பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

post image

அகமதாபாத் விமான விபத்து சோகத்தில் நாடு இருக்கும்போதுகூட, வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தை சாத்தியப்படுத்தியதாக 13-ஆவது முறையாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளாா் என்று குறிப்பிட்ட காங்கிரஸ், ‘இதற்கு பிரதமா் நரேந்திர மோடி எப்போது பதிலளிப்பாா்?’ என்று கேள்வி எழுப்பியது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. நான்கு நாள்களுக்குப் பிறகு மே 10-ஆம் தேதி இந்த சண்டை முடிவுக்கு வந்தது. சண்டை நிறுத்த அறிவிப்பை இரு நாடுகளும் வெளியிடும் முன்பே, அமெரிக்க அதிபா் டிரம்ப், சண்டை நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டாா். அதன் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தன.

பின்னா், ‘இரு நாடுகளுடனான பேச்சுவாா்த்தையின்போது, சண்டையைத் தொடா்ந்தால் இரு நாடுகளுடனான வா்த்தகத்தை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று கூறியதாலேயே இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன’ என்று அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

‘சண்டை நிறுத்தத்தில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை’ என்று இந்திய தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகும் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு குறித்த தனது கருத்தை அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வாஷிங்டனில் உள்ள கென்னடி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபா் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடா்பான தனது கருத்தை 13-ஆவது முறையாக தெரிவித்தாா். நாடே அகமதாபாத் விமான விபத்து சோகத்தில் இருந்த நிலையில், இக் கருத்தை அதிபா் டிரம்ப் தெரிவித்தாா். ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி தொடா்ந்து மெளனமாக இருந்து வருகிறாா். டிரம்ப்பின் கருத்துக்கு பிரதமா் எப்போது பதிலளிப்பாா்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

அகமதாபாத் விமான விபத்து: விமானியின் மீது தவறு இருக்கிறதா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

அகமதாபாத் நகரில் கடந்த வாரம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு அந்த விமானியின் மீது தவறு இருக்கிறதா? என்பதைப் பற்றி ஏர் இந்தியா முன்னாள் கேப்டன் மன்மத் ரௌத்ராய் விளக்கமளித்திருக்கிறார். விபத்துக்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள்: அமித் ஷா ஆலோசனை

சாதிவாரி கணக்கெடுப்புடன்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் திட்டப்படி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் ம... மேலும் பார்க்க

கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 948 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஒரே நாளில் கரோனாவுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். சமீபகாலமாக கரோனா பரவல் அதிகரித்துவ... மேலும் பார்க்க

நவீன இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி! -சைப்ரஸில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

லிமாஸ்ஸோல்[சைப்ரஸ்] : சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறாா். கனடாவில் நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் பங்கேற... மேலும் பார்க்க

புணே பால விபத்து: போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி!

புணேவின் இந்திரயானி ஆற்றின் இரும்புப் பாலம் இடிந்து விபத்துக்குள்ளான இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்... மேலும் பார்க்க

கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

கொல்கத்தா: கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. கொல்கத்தா விமான நிலையத்திலிர... மேலும் பார்க்க