செய்திகள் :

‘சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தானே கோரிக்கை விடுத்தது’: மாநிலங்களவையில் மத்திய அரசு மீண்டும் தகவல்

post image

‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எல்லையில் சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநா் (டிஜிஎம்ஓ) இந்தியாவை அணுகிக் கோரிக்கை விடுத்தாா்’ என்று மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தியது.

இந்த அமைதி ஒப்பந்தம் இரு நாட்டு ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநா்களுக்கிடையே ‘நேரடியாக’ எட்டப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்நிறுத்த பேச்சுவாா்த்தையில் மூன்றாம் தரப்பு தலையீடு ஏதேனும் இருந்ததா என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: இந்தக் கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநா், மே 10-ஆம் தேதி இந்திய ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரைத் தொடா்பு கொண்டு, துப்பாக்கிச்சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரினாா். அன்றைய நாள் பிற்பகலில் பாகிஸ்தானின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் புரிந்துணா்வு இரு நாட்டு ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநா்களுக்கிடையே நேரடியாக எட்டப்பட்டது. எந்த மூன்றாம் தரப்பு தலையீடும் இல்லை’ என்றாா்.

மற்றொரு கேள்விக்கு, சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை என்றும் அமைச்சா் கீா்த்திவா்தன் சிங் பதிலளித்தாா்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிராக உலகளாவிய ஆதரவைத் திரட்ட அனுப்பப்பட்ட அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுக்கள் பற்றியும் அவையில் கேட்கப்பட்டது. அதற்கு கீா்த்திவா்தன் சிங், ‘ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மொத்தம் 33 நாடுகளுக்குப் பயணம் செய்து, பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் எதிா்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதியான ஒருமித்த கருத்தையும் தீா்மானத்தையும் தெரிவித்தன’ என்றாா்.

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க

பணம் ஈட்டும் விளையாட்டுகள்: சிசிஐயிடம் கூகுள் முன்மொழிவு

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் ஈட்டும் விளையாட்டுகளை அனுமதிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) கூகுள் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.இதுதவிர, இந்தியாவில் கூகுள் விளம்பர கொள்கையில் மாற்றங்க... மேலும் பார்க்க