செய்திகள் :

சத்தீஸ்கரில் நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை! 2 வீரர்கள் படுகாயம்!

post image

சத்தீஸ்கரில் நக்சல்களுடான பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில், மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

பிஜப்பூர் மாவட்டத்தின் வனப் பகுதியில், இன்று (ஆக.12) காலை மாநிலக் காவல் துறையின் ஒரு பிரிவான, மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில், மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நடவடிக்கைகளில் ஏராளமான நக்சல்களும் படுகாயமடைந்திருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கைகள் நேற்று (ஆக.11) முதல் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பதவியேற்பு! எண்ணிக்கை 44 ஆக உயர்வு!

Two members of the District Reserve Police Force have been seriously injured in a gunfight between security forces and Naxals in Chhattisgarh.

சுதந்திர தினத்தில் சத்தீஸ்கர் மசூதிகளில் தேசியக்கொடி ஏற்ற வக்ஃபு வாரியம் உத்தரவு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என வக்ஃப் வாரியம் உத்தரவிட்டுள்ளது.மாநில வக்ஃ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் ரெட் அலர்ட்! வாரம் முழுவதும் மீண்டும் கனமழை தொடரும்.. தயார்நிலையில் ராணுவம்!

உத்தரகண்டில், வரும் வாரம் முழுவதும் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு மாவட்டங்களுக்கு, ரெட், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உத்தரகண்டின் டெஹ்ராடூன், த... மேலும் பார்க்க

மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!

கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் மாமியாரை 19 துண்டுகளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்குள்பட... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் ராகுலுக்கு ஆதரவு!

வாக்குத் திருட்டு விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்துள்ளனர்.கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும்... மேலும் பார்க்க

டிரம்ப் வரியால் சூரத்தில் வைர ஏற்றுமதி சரிவு!

நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் 50 சதவீத வரி விதிப்பினால், குஜராத் மாநிலம் சூரத்தில் வைர ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி ம... மேலும் பார்க்க

6 மாதங்களில் 19,600 பாலியல் குற்றங்கள்! ராஜஸ்தானை உலுக்கும் ‘திடுக்’ தரவுகள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுமார் 19,000 பெண்கள் பாலியல் ரீதியிலான வன்கொடுமை குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.பெண்க... மேலும் பார்க்க