செய்திகள் :

டிரம்ப் வரியால்.. அமெரிக்கர்களுக்கு கானல் நீராகுமா காபி?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளுடனான வர்த்தகத்துக்கு விதித்து வரும் புதிய வரி விதிப்பு முறையால், வரி விதிப்பை சந்திக்கும் நாடுகளோடு சேர்த்து, அமெரிக்கர்களும்தான் பாதிக்கப்படுவார்கள்.

இந்த வரி விதிப்பை, பெரும்பாலான நிறுவனங்கள், வாங்குவோர் தலையில் சுமத்ததே பார்க்கும். எடுத்தவுடன் முழுமையாக சுமத்தாவிட்டாலும் படிப்படியாக வரி முழுவதும் பொருள்களின் விலை மீது ஏற்றப்படலாம். இதனால் அந்நாட்டில் சில பொருள்களின் விலை சுமார் ரகம் முதல் தடாலடி ரகம் வரை உயரும் வாய்ப்பு உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்பட சுமார் 70 நாடுகளுக்கு 10 முதல் 41 சதவீத வரியும், பிற நாடுகளுக்கு அதை விட அதிகமான வரியும் விதித்துள்ளார்.

இதனால், அமெரிக்காவில் விலை உயர்வை சந்திக்கும் பொருள்களில் முதல் இடத்தில் இருப்பது காபி. அடுத்து ஷு, வீட்டு உபயோகப் பொருள்கள். இதுபோன்ற விலை உயர்வால், அமெரிக்கர்களுக்கு ஓராண்டுக்கு அத்தியாவசிய செலவு 2400 டாலர் வரை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

காபி விலை

நிச்சயம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பினால் அமெரிக்காவில் வாழும் காபி பிரியர்கள் சற்று கசப்பான அனுபவத்தை உணர்வார்கள்.

அமெரிக்காவுக்கு அதிகளவில் காபியை ஏற்றுமதி செய்யும் பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, பிரேசில், தனது காபி ஏற்றுமதியை குறைக்காமல், விலையை உயர்த்தினால் அமெரிக்கர்களுக்கு கடும் சிக்கல்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த மே மாதம் காபி விலை ஏற்கனவே 11 சதவீதம் உயர்ந்தது. பல்வேறு நாடுகளில் இயற்கை சீற்றங்கள் காரணமாக காபி உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதே வேளையில் தேவை அதிகரித்ததால் காபி விலை உயர்ந்தது.

தற்போது டிரம்ப் வரி மற்றும் பிரேசிலுக்கு 50 சதவீதம் போன்றவை மீண்டும் காபியின் விலையை எகிறச் செய்யும் என்றே கருதப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் காபி விலை அதிகமாம். இனி மீண்டும் உயர்ந்தால், மக்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு மாறிவிடும் என்கிறார்கள்.

US President Donald Trump's new tariff regime for trade with other countries around the world will affect not only the countries that face the tariffs, but also Americans.

இதையும் படிக்க.. 6 மாதங்களில் 19,600 பாலியல் குற்றங்கள்! ராஜஸ்தானை உலுக்கும் ‘திடுக்’ தரவுகள்!

50% வரி.. இந்தியாவை கிண்டலடிப்பதா? கொந்தளித்த இலங்கை எம்.பி.

அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரி விதித்திருப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பேச்சு எழுந்தபோது, இந்தியாவை கிண்டலடிப்பதா, நம்முடைய மோசமான நேரத்தில் உதவியதே இந்தியாதான் என எம்.பி. டி சி... மேலும் பார்க்க

ரஷியாவின் மிக பயங்கர டெட் ஹேண்ட்! மெத்வதேவ் எச்சரித்த அணு ஆயுத அமைப்பு உண்மையா?

ரஷியாவுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பதிலடியாக, டெட் ஹேண்ட் எனப்படும் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதத் தாக்கும் அமைப்பு பற்றி முன்னாள் ரஷிய அதிபர் டிமிட்ர... மேலும் பார்க்க

பலூச் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல.. பாகிஸ்தானால் பாதிக்கப்பட்டவர்கள்: மனித உரிமை அர்வலர்கள்!

பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் மஜீத் படைப்பிரிவை பயங்கரவாதக் குழுக்களாக அமெரிக்க அறிவித்துள்ளதற்கு, அந்நாட்டின் மூத்த மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தள... மேலும் பார்க்க

சீனாவுக்கு சலுகை! வரிவிதிப்பு மேலும் 90 நாள்கள் நிறுத்திவைப்பு! டிரம்ப்

சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்த... மேலும் பார்க்க

அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!

அமெரிக்காவின் மொண்டானாவில் தரையிறங்கிய சிறிய ரக விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.இதில், சிறிய ரக விமானத்தில் பயணித்த விமானி உள்பட 4 பேருக்கு கா... மேலும் பார்க்க

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்பு! - அதிபர் டிரம்ப்

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்படைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் எச்சரிக்கையும் மீறி, ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியத... மேலும் பார்க்க