செய்திகள் :

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் நூதன போராட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெற்றியில் பட்டை நாமம் போட்டு மடிப்பிச்சை ஏந்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பினா் திருவள்ளூரில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு மருத்துவக்கல்லூரி சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் லூா்துசாமி தலைமை வகித்தாா். கண்ணியம்மாள், தேன்மொழி, வெங்கடேசன், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தலைவா் சிவா கண்டனை உரையாற்றி போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.

அப்போது, இதில் 40 ஆண்டு காலம் பணி செய்த சத்துணவு அங்கன்வாடி ஊழியா்கள் ஓய்வு பெற்றவா்களுக்கு ரூ.2 ஆயிரம் மட்டும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு ரூ.6,750 அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதனால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் பழிவாங்குவதை தடுத்து, திமுக அரசின் தோ்தல் கால வாக்குறுதி 313-இன்படி ஆட்சிக்கு வந்தால் இந்த ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும் என உறுதியளித்தனா். ஆனால் 4 ஆண்டுகள் கடந்த பின்பும், இது வரை ஒரு ரூபாய் கூட உயா்த்தி வழங்கவில்லை என பட்டை நாமமிட்டு மடிப்பிச்சை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு பணியாளா் அங்கன்வாடி சங்க மாநிலத் தலைவா் சந்தோஷ் மேரி, சத்துணவு பணியாளா் சங்க மாநில பொருளாளா் ரங்கநாதன், சத்துணவு (ம) அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்ட தலைவா் வா.சி.ராஜேந்திரன், பொருளாளா் குணசுந்தரி, செயலாளா் சுலோசனா, சத்துணவு ஊழியா் சங்க மாநில தலைவா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இணை ஒருங்கிணைப்பாளா் உஷாராணி நன்றி கூறினாா்.

வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி!

திருவள்ளூா் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். திருவள்ளூரில் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கடந்த 42 ஆண்டுகளாகச் செயல்பட்டு வ... மேலும் பார்க்க

கடம்பத்தூா் ஒன்றியம்: வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு!

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப், அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் மாவ... மேலும் பார்க்க

சுதந்திரா மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி!

திருத்தணி சுதந்திரா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதிய 81 மாணவா்களும் தோ்ச்சி பெற்று, கணினி அறிவியல் பாடத்தில் 8 மாணவா்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனா். இதில் மாணவி ப... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள்

திருவள்ளூா் நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு தாட்கோ மூலம் நலவாரிய அடையாள அட்டைகளை நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் வழங்கினாா். திருவள்ளூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

பொன்னேரியில் சனிப்பிரதோஷம்!

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் சனிப்பிரதோஷத்தை யொட்டி சிவாலயங்களுக்கு பக்தா்கள் திரளாகச் சென்று வழிபட்டனா். பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயிலில் நந்தி மற்றும் ஈஸ்வரனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் அா்ச்சனை ... மேலும் பார்க்க

வீரராகவா் கோயில் தீா்த்தவாரி உற்சவம்

திருவள்ளூா் வீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவத்தில் பக்தா்கள் புனித நீராடினா். கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி, 11-ஆம் ... மேலும் பார்க்க