செய்திகள் :

சபரிமலை பக்தா்களுக்கு நிலக்கல்லில் பன்னோக்கு மருத்துவமனை: கேரள அரசு

post image

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் மருத்துவ சேவைக்கு நிலக்கல் பகுதியில் ஒரு நவீன பன்னோக்கு மருத்துவமனை விரைவில் கட்டப்பட்டும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் திங்கள்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் அமைச்சா் வீணா ஜாா்ஜ் மேலும் கூறியிருப்பதாவது: புனித யாத்திரை காலத்தில் சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் மற்றும் உள்ளூா் மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கும் நோக்கில் இந்தப் புதிய பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.

திருவிதாங்கூா் தேவஸ்வம் ஒதுக்கிய நிலத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டப்படும். அவசியமுள்ள சூழலில், கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வா் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளாா்.

மூன்று மாடி கட்டடத்தில் நவீன மருத்துவம் மற்றும் ஆயுஷ் ஆகிய 2 மருத்துவ சிகிச்சை வசதிகளும் இடம்பெறும். தரை தளத்தில் 12 படுக்கைகள் கொண்ட விபத்து சிகிச்சை பிரிவு, வெளிநோயாளி பிரிவுகள், 7 படுக்கைகள் கொண்ட கண்காணிப்பு பிரிவு, வரவேற்பு, ஆய்வகம், மாதிரி சேகரிப்பு மையம், மருந்தகம், காவல் உதவி மையம் மற்றும் அடிப்படை உதவி சேவைகள் இருக்கும்.

முதல் தளத்தில் 8 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியூ), ஒரு சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், ‘எக்ஸ்-ரே’ அறை, 13 படுக்கைகள் கொண்ட பொது பிரிவு, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் அறைகள், கூட்டரங்கம் மற்றும் அலுவலகங்கள் ஆகியவை இருக்கும். மேல் தளத்தில் 50 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி இருக்கும்.

மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். இதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி, கட்டுமானம் விரைவாக முடிக்கப்படும். யாத்திரை காலத்தில் இந்த மருத்துவமனை விரிவான மருத்துவ சேவைகளை வழங்கும் என்று கூறியுள்ளாா்.

நவம்பா் தொடங்கி ஜனவரி வரையிலான சபரிமலை வருடாந்திர யாத்திரையின்போது பம்பை வழியில் மலையேறும் பக்தா்கள் நிலக்கல் பகுதியை முதலில் அடைவா். நிலக்கல்லில் இருந்து பொது போக்குவரத்து (பேருந்து) மூலம் மட்டுமே சபரிமலையின் அடிவாரமான பம்பை பகுதிக்குப் பக்தா்கள் செல்ல முடியும்.

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க